h

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 3000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.

Advertisment

Advertisment

இதனால் உலகின் பல்வேறு நாட்டை சேர்ந்த மக்கள் கடந்த 50 நாட்களாக வீடுகளில் முடங்கி இருக்கிறார்கள். இதனால் வீட்டில் இருக்கும் பெரியவர்களை காட்டிலும் சிறுவர்கள் போர் அடித்து இருக்கிறார்கள். அப்படி போரடித்து போனதாக உணர்ந்த தனது குட்டி மகளை குஷிப்படுத்த அப்பா ஒருவர் தற்போது வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அனிமேஷன் மற்றும் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரங்களில் வரும் ஐகானிக் ஆடையை தானும், அதற்கு ஏற்ற மாதிரி தன்னுடைய குழந்தைக்கும் ஆடை அணிவித்து வெளியில் அழைத்து செல்லும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.