Skip to main content

ஒரு கிலோ எடையுள்ள பச்சை நிற வைரம்!

Published on 02/11/2018 | Edited on 12/12/2018

ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் உள்ள வைரச் சுரங்கத்தில் உலகின் மிகப்பெரிய பச்சை நிற வைரம் கிடைத்திருக்கிறது. 1 கிலோ 100 கிராம் எடையுள்ள இந்த வைரம் 5 ஆயிரத்து 655 கேரட் என மதிப்பிடப்பட்டுள்ளது.  இது மனித மூளையின் எடை அளவு இருக்கிறது.

 

dii

 

 

அக்டோபர் 2 ஆம் தேதி ஜாம்பியாவின் மத்திய பகுதியில் உள்ள காஜெம் என்ற உலகின் மிகப்பெரிய வைரச்சுரங்கத்தில் இந்த வைரம் வெட்டி எடுக்கப்பட்டது. இந்த வைரம் நவம்பர் மாத இறுதியில் சிங்கப்பூரில் வைத்து ஏலம் விடப்படுகிறது. பிரிட்டனுக்கு சொந்தமான இந்த சுரங்க நிறுவனத்துக்கு விலையில் 75 சதவீதமும், ஜாம்பியா அரசுக்கு 25 சதவீதமும் பங்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

 

இந்த வைரம் விற்கும் விலையில் தனது பங்கு 10 சதவீதத்தை ஜாம்பியாவில் உள்ள இரண்டு சிங்கம் சரணாலயத்திற்கு கொடுப்பதாக சுரங்க நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வைரத்தின் பெயர் இன்கல்மு அல்லது சிங்கம் என்றே வைக்கப்பட்டுள்ளது.

 

இதற்கு முன் 2010 ஆம் ஆண்டு இதைக்காட்டிலும் எடையும் மதிப்பும் கூடுதலான வைரம் இதே காஜெம் வைரச் சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. அது 6 ஆயிரத்து 225 கேரட் மதிப்புள்ளது. அதற்கு இன்ஸோஃபு என்று பெயர் வைக்கப்பட்டது.

 

ஆனால் உலகின் மிகப்பெரிய வைரம் என்பது 2001 ஆம் ஆண்டு பிரேசிலில் உள்ள வைரச்சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்பட்டது. அதன் எடை 360 கிலோ ஆகும். பலமுறை திருடப்பட்ட இந்த வைரத்தின் மதிப்பு ஒருசமயம் 7கோடியே 50 லட்சம் டாலர்களாக இருந்தது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண்மை நீக்கம் செய்ய அதிரடி நடவடிக்கை; சட்டத்தை நிறைவேற்றிய மடகாஸ்கர் அரசு!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Madagascar government passed the law Action to remove the male factor who misbehave

உலகெங்கிலும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. இந்த குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காகப் பல்வேறு நாடுகள் அதிரடி சட்டங்கள் கொண்டு வந்திருக்கின்றன. அந்த வகையில், கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் என்ற நாடு, பெண் குழந்தைகளுக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மிகக் கடுமையான ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மடகாஸ்கர். இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 80 லட்சம் ஆகும். இதனிடையே, இந்த நாட்டில் வாழும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதாவது, கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 600 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் மட்டும் 133 பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அதனால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனையை அதிகரிக்கவும் மடகாஸ்கர் அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. அதன்படி, குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கர் அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

மடகாஸ்கர் நாடாளுமன்றத்தில், குற்றவாளிகளுக்கு ரசாயன ரீதியிலும், அறுவை சிகிச்சை மூலமாகவும் ஆண்மை நீக்கம் செய்யும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் அந்நாட்டின் உயர் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின்னர் அந்த சட்டம் அமலுக்கு வர உள்ளது.

Next Story

ஐபிஎல் கான்ட்ராக்ட் விதிகளில் மாற்றம்! கூடுதல் சம்பளம் பெறும் வீரர்கள் யார்?

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
Change in IPL contract rules! Who are the Indian players who will get extra salary?


ஐபிஎல்லில் ஒரு மெகா ஏலத்தில் எடுக்கப்படும் வீரருக்கு மூன்று ஆண்டுகள் கான்ட்ராக்ட் போடப்படும். முதலில் அவர் என்ன தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டாரோ அதே தொகையே மூன்று ஆண்டுகளுக்கும் வழங்கப்படும். இந்த மூன்று ஆண்டுகளில் அவர் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் இடம் பிடித்தாலும் அவருடைய சம்பளமானது உயராமல், முதல் வருடம் என்ன கொடுக்கப்பட்டதோ, அதே தொகையே கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது பிசிசிஐ அந்த விதிகளில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

அதன்படி ஏலத்தில் 50 லட்சத்துக்கும் கீழ் எடுக்கப்பட்ட இந்திய அணியில் ஆடாத இளம் வீரர்களுக்கு, தற்போது ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அது என்னவென்றால், இந்திய அணியில் ஆடாத 50 லட்சத்திற்கும் குறைவாக ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீரர், அடுத்த ஐபிஎல்லுக்கான இடைப்பட்ட காலத்தில் இந்திய அணியில் இடம் பிடித்து ஒரு ஒரு ஆட்டத்தில் ஆடினால், அவருடைய சம்பளத்தொகையானது 50 லட்சமாக உயர்த்தப்படும். அதேபோல 5 முதல் 9 ஆட்டங்களில் ஆடி இருந்தால், அவருடைய சம்பளமானது 75 லட்சமாக உயர்த்திக் கொடுக்கப்படும். 10-க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் ஆடியிருந்தால், அவருடைய சம்பளமானது 1 கோடி ரூபாயாக உயர்த்திக் கொடுக்கப்படும். இது அவர் விளையாடிய இன்டர்நேஷனல் ஆட்டங்களுக்குப் பிறகு நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும். எடுத்துக்காட்டாக போன வருடம் ஐபிஎல்லில் ஏலத்தில் எடுக்கப்பட்டு அவர் இந்த வருட ஐபிஎல்லுக்கு முன் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தால், அவருக்கு அடுத்த இரு வருடங்களுக்கு இந்த உயர்ந்த சம்பளத்தொகையானது உயர்த்தி வழங்கப்படும்.

Change in IPL contract rules! Who are the two Indian players who will get extra salary?

ஆனால் இந்த உயர்த்தப்பட்ட சம்பளத் தொகை அணியின் தொகையில் எடுக்கப்படாது. இந்த உயர்த்தப்பட்ட சம்பளத் தொகையை பிசிசிஐயே இந்த வீரர்களுக்கு வழங்கும். அணி நிர்வாகம் என்ன ஏலத் தொகைக்கு எடுத்ததோ, அந்த ஏலத்தொகையே மூன்று வருடங்களும் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த உயர்ந்த சம்பளம் வாங்கும் இந்திய இளம் வீரர்கள் வேறு அணிக்கு டிரேட் செய்யப்பட்டால், வாங்கிய அணியே மொத்த சம்பளத்தையும் கொடுக்க வேண்டும். முதன் முதலில் ஏலம் எடுத்த அணிக்கு மட்டுமே அவர்கள் ஏலம் எடுத்த தொகையை மட்டும் கொடுக்கும் சலுகை வழங்கப்படும். அந்த வீரரை மற்ற அணி வாங்கினால், இந்த இன்டர்நேஷனல் ஆட்டங்களில் மூலம் அவருக்கு உயர்த்தப்பட்ட சம்பளத்தொகையையும் சேர்த்து அந்த புதிய அணியே வழங்க வேண்டும்.

இந்நிலையில், இந்திய அணியில் தற்போது இரண்டு இந்திய வீரர்கள் முதன்முதலாக இந்த சம்பள உயர்வை பெறுகின்றனர். இந்த விதிகள் மாற்றம் செய்யப்பட்ட பிறகு சாய் சுதர்சன் இந்திய அணியில் இடம் பிடித்ததால், அவருக்கு இந்த வருடம் 50 லட்சமாக சம்பளம் உயர்த்திக் கொடுக்கப்படும். அவர் ஏலத்தில் எடுக்கப்பட்ட தொகையான 20 லட்சத்திலிருந்து மேற்கொண்டு 30 லட்சத்தை பிசிசிஐ அவருக்கு வழங்கும். அதே போல மற்றொரு இந்திய தொடக்க ஆட்டக்காரரான ராஜத் பட்டிதாரும் இந்த சம்பள உயர்வை பெறுகிறார். பெங்களூர் அணிக்கு ஐபிஎல்லில் விளையாடி வரும் அவருக்கு தற்போது இந்திய அணியில் இடம் கிடைத்து நேற்றைய போட்டியில் ஆடியதால், அவரும் 50 லட்சம் சம்பளத்தை இந்த வருடத்தில் இருந்து பெறப் போகிறார்.

சிறப்பாக ஆடி இந்திய அணியில் இடம் பிடித்ததற்கும் சம்பள உயர்வு வழங்கப்படுவது வீரர்கள் மத்தியில் புது உத்வேகத்தை கொடுக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- வெ.அருண்குமார்