Advertisment

நாட்டில் 4000-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமிக்ரான்: இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் - பிரிட்டன் சுகாதாரத்துறை செயலாளர்!

omicron

உலகமெங்கும் ஒமிக்ரான் கரோனாபரவி வரும் நிலையில், உலகிலேயே முதல் முறையாக பிரிட்டனில் ஒமிக்ரான்வைரசால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தநிலையில் நேற்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸில்பேசிய சுகாதார செயலாளர் சஜித் ஜாவித், லண்டனில் 44 சதவீத கரோனாபாதிப்புக்கு ஒமிக்ரான்வகை கரோனாகாரணமாக இருப்பதாகவும், அடுத்த 48 மணிநேரத்தில்ஒமிக்ரான்லண்டன் நகரில் அதிகம் பரவும் கரோனாவகையாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும் பிரிட்டனில் 4,713 பேருக்குஒமிக்ரான்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார். மேலும் வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில், ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின்எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Advertisment

britain OMICRON
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe