Skip to main content

சாப்பாட்டுக்காக ஜெயிலுக்கு போக நினைத்த தாத்தாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

Published on 20/12/2019 | Edited on 20/12/2019


ஜெர்மனியை சேர்ந்த 65 வயது முதியவர் எபெர்கோல்டு. படித்தவரான இவர் கணிணிதுறையில் வேலை பார்த்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற பிறகு அதில் வந்த பணத்தை கொண்டு பல நாடுகளுக்கு இவர் சுற்றுலா சென்றுள்ளார். கையில் இருந்த பணம் தீர்ந்துவிடவே சாப்பிட கஷ்டப்பட்டுள்ளார். சிறுசிறு வேலைகளில் ஈடுபட்டு அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு காலத்தை கழித்து வந்தவருக்கு, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவ செலவுக்காக தங்கியிருந்த வீட்டையும் விற்றுள்ளார்.



இதனால் தங்குவதற்கு இடமில்லாது தவித்த அவர், தன்னுடைய காரையே வீடாக மாற்றி சுற்றிவந்துள்ளார். எதிர்பாராத விதமாக அவருடைய ஓட்டுநர் உரிமம் காலாவதியாகி விடவே அவர் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்துள்ளார். இந்நிலையில் ஜெயிலுக்கு சென்றால் சாப்பாட்டுக்கு பிரச்சனை இருக்காது என்று நினைத்த அவர், சைக்கிள் செல்லும் பாதையில் தன்னுடைய வாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளார். ஆனால் எதிர்பாரதவிதமாக எதிரே சிறுவன் ஒருவன் குறுக்கே வர, சிறுவன் சாலையின் ஓரத்தில் தூக்கிவீசப்பட்டு இறந்தார். தற்காலிகமாக ஜெயிலுக்கு போகலாம் என்று நினைத்த அந்த முதியவருக்கு நீதிமன்றம் தற்போது ஆயுள்தண்டனை விதித்துள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் முதியவர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 old man fixing the traffic in the hot sun

சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.

Next Story

சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் தற்கொலை முயற்சி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Arrested old man attempted to incident

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது. மேலும் கருணாஸ் என்ற அந்த இளைஞர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியைத் தேடியதும் தெரிய வந்துள்ளது. மேலும் கருணாஸ் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவன் என்பது தெரிய வந்தது.

Arrested old man attempted to incident

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் புதுச்சேரி அரசு, ஐபிஎஸ் கலைவாணன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. அந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. கருணாஸும், விவேகானந்தனும் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சிறையில் உள்ள விவேகானந்தன் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குளிக்க பயன்படுத்தும் சோப்பைச் சாப்பிட்டும், துணியால் முகத்தை இறுக்கியும் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.