கச்சா எண்ணெய் விலை கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத அளவுசரிவைச்சந்தித்துள்ளது.

Oil price crashes after Saudi Arabia decrease selling price

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கச்சாஎண்ணெய்விலையைக்கட்டுப்பாட்டில் வைக்கும்ஒபெக்ஒப்பந்தத்தை ரஷ்யா நிராகரித்த காரணமாக இந்த திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும்கரோனாவைரஸ்காரணமாக எரிபொருளுக்கான தேவை குறைந்ததோடு, உலக நாடுகளின் பொருளாதாரமும் ஸ்திரத்தன்மை அற்றசூழலைச்சந்தித்து வருகின்றன. இந்நிலையில் கச்சாஎண்ணெய்தேவையைக்காட்டிலும் தயாரிப்பு மற்றும் தேக்கம் அதிகரித்துள்ளது. எனவேஇதனைச்சரி செய்யும் விதமாக, சவுதி தலைமையிலானஒபெக்நாடுகள் கச்சா எண்ணெய்உற்பத்தியைக்குறைத்துக்கொள்வது குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தின.

ஆனால்உற்பத்தியைக்குறைப்பதில்சுமுகமானமுடிவு எட்டப்படாத சூழலில், இன்று காலை கச்சா எண்ணெய்விலையைக்குறைப்பதாகச்சவுதி அறிவித்துள்ளது. சவுதிக்கு அடுத்துஅதிகப்படியாகக்கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் ரஷ்யா,ஒபெக்முடிவுக்கு ஒப்புக்கொள்ளாத சூழலில்,ரஷ்யாவுக்குப்பதிலடி தரும் வகையில் சவுதி இந்த முடிவைஎடுத்துள்ளதாகத்தெரிவிக்கப்படுகிறது. சவுதியின் இந்தவிலை குறைப்பைத்தொடர்ந்துசர்வதேசச்சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 31 டாலர்ஆகக்குறைந்துள்ளது.1991க்குபிறகு கடந்த 29 ஆண்டுகளில் கச்சாஎண்ணெய் விலை இந்த அளவுசரிவைச்சந்திப்பது இதுவே முதல்முறை ஆகும்.