ஆண்கள் குளிக்கும் நீச்சல் குளத்தில் பெண்கள் குளித்தால் கர்ப்பமாக வாய்ப்பு உள்ளதாக பெண் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர் சிட்டி ஹிக்மாவாட்டெ. இவர் அடிக்கடி ஏதாவது வித்தியாசமான கருத்துக்களை தெரிவித்து கடுமையான சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். அந்த வகையில் அவர் தற்போது பேசியுள்ள ஒரு விஷயம் அவரை கடும் இடரில் கொண்டுவந்து விட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அதாவது, ஆண்கள் குளிக்கும் நீச்சல் குளத்தில் பெண்கள் குளித்தால் அவர்கள் கர்ப்பமாக வாய்ப்பு இருப்பதாக பேசியதே அவரை தற்போது சர்ச்சையில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இவரின் இந்த கருத்தை பெரும்பாலானவர்கள் கடும் விமர்சனம் செய்து வருகிறார்கள். மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படாத ஒரு செய்தியை அதிகாரி ஒருவர் பொறுப்பில்லாமல் தெரிவிப்பது கண்டனத்துக்குரியது என்றும் அவரை பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.