Skip to main content

நம்பர் - 1 பாடகியின் நாய்க் குட்டிகள் திருட்டு; திருடனுக்கு 21 ஆண்டு சிறைத் தண்டனை கொடுத்த நீதிமன்றம் 

Published on 07/12/2022 | Edited on 07/12/2022

 

- தெ.சு.கவுதமன்

Number 1 singer's puppies stolen; The court sentenced the thief to 21 years in prison

 

கடந்த 2018 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்கான பாடலைப் பாடியவர்களில் ஒருவரான பிரபல பாப் பாடகி லேடி காகாவின் வளர்ப்பு நாய்களைத் திருடிய நபருக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டி நீதிமன்றம், 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

 

ஃப்ரெஞ்ச் புல்டாக் வகை நாய்க்குட்டிகளுக்கு மவுசும் விலையும் அதிகம். இந்திய ரூபாய் மதிப்பில் சொல்வதானால் நாய் ஒன்று 75,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகக்கூடியது. இந்த வகை நாய்கள் பெரிய பெரிய மில்லியனர்கள் வீடுகளில் மட்டுமே அவ்வளவு விலை கொடுத்து வாங்கி வளர்க்கப்படுகின்றன. இவற்றின் விலை காரணமாக, இவற்றைத் திருடி விற்பதற்கென்று திருட்டுக்கும்பல்களும் உண்டு.

 

Number 1 singer's puppies stolen; The court sentenced the thief to 21 years in prison

 

பிரபல பாடகி லேடி காகா தனது வீட்டில் ஆசியா, கோஜி, கஸ்டவ் என மூன்று ஃப்ரெஞ்ச் புல்டாக் வகை நாய்க்குட்டிகளை வளர்த்துவருகிறார். அந்த நாய்க்குட்டிகளைப் பராமரிப்பதற்கென ரேயான் பிஷ்சர் என்ற ஊழியர் ஒருவரை நியமித்துள்ளார். அவர் வழக்கம்போல், 2021 பிப்ரவரி 24ம் தேதி அதிகாலையில், லேடி காகாவின் வீட்டருகே, பெர்னாண்டோ பள்ளத்தாக்கு பகுதியில் வாக்கிங் அழைத்துச் சென்றபோது, ஜேம்ஸ் ஹோவர்ட் ஜாக்சன் என்பவர், அவரது இரண்டு நண்பர்களோடு சேர்ந்து அந்த நாய்களைத் திருட முயன்றுள்ளார். 

 

ஹோவர்ட் ஜாக்சன் வாக்கிங் செல்லும் பாதையிலேயே காரில் பின் தொடர்ந்து சென்றவர்கள், திடீரென காரிலிருந்து இறங்கி இரண்டு நாய்க்குட்டிகளை முதலில் பிடித்து காருக்குள் திணித்தனர். உடனே அவர்களை ரேயான் பிஷ்சர் தடுக்க முயலவே, அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவரது நெஞ்சின் ஓரத்தில் துப்பாக்கிக் குண்டு பாய, அலறித் துடித்தபடியே "யாராவது உதவுங்கள்... என்னைச் சுட்டுவிட்டார்கள்... நாய்களைக் கடத்திச் செல்கிறார்கள்" என்று கதறியிருக்கிறார். நிலைமை விபரீதமானதால், இரண்டு நாய்க்குட்டிகளோடு அவர்கள் எஸ்கேப்பானார்கள். ஆனால், இந்த திருட்டுச் சம்பவம் முழுவதும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. 

 

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பிஷ்சர், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார். அவர்மூலமாக, லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போதுதான் கடத்தப்பட்ட நாய்க்குட்டிகள், பிரபல பாடகி லேடி காகாவுக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்தது. உடனே காவல்துறையினர் நாய்களைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைத்துத் தேடியதில், ஜெனிபர் மெக்ப்ரைட் என்ற பெண்மணி, காணாமல்போன இரண்டு நாய்க்குட்டிகளையும் தானாகவே கொண்டு வந்து ஒப்படைத்ததோடு, தனக்கும் இந்த திருட்டுக்குமுள்ள தொடர்பை ஒப்புக்கொண்டார். அவர்மூலமாக, திருடர்கள் மூவரும் போலீசில் பிடிபட்டனர்.

 

இதுதொடர்பான வழக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டி நீதிமன்றத்தில் நடைபெற்றதில், விசாரணை முடிந்து தீர்ப்பளித்த நீதிபதிகள், முக்கிய குற்றவாளியான ஜாக்சனுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தனர். அவருடன் வந்தவர்களான ஜெய்லின் வொய்ட் மற்றும் லாஃபயெட்டி வேலே என்ற இருவருக்கும் முறையே 6 ஆண்டுகள், 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

 

நாய்க்குட்டிகளைத் திருடியதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று ஆச்சர்யமாக இருக்கிறதா? பிரபலமானவங்க வீட்டு நாய்க்குட்டிகள்னா சும்மாவா பாஸ்?! 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்; களமிறங்கிய அமெரிக்கா!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
America sided with Israel against Iran

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

America sided with Israel against Iran

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Next Story

“உலகப்போர் ஏற்படும் அபாயம் இருக்கிறது” - டிரம்ப் எச்சரிக்கை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Trump warns There is a risk of world war

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் மீது கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர்ச்சூழல் நிலவும் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும், இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலை சமாளிப்பதற்கு இஸ்ரேலும் களமிறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Trump warns There is a risk of world war

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, “இஸ்ரேல் - ஈரான் மோதல் விவகாரத்தில் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளது. அமெரிக்காவிற்கு இது மிகவும் ஆபத்தான காலகட்டம். அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடப்பதற்கு முன்பாக அதுவும் குறிப்பாக தற்போது உள்ள திறமையற்ற தலைவர்களின் ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.