Skip to main content

கிரிப்டோ சொத்துக்களை திருடி வடகொரியா ஏவுகணை சோதனை

Published on 08/02/2022 | Edited on 08/02/2022

 

north korea

 

அணு சக்தி சோதனை நடத்தவும், பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தவும் வடகொரியாவிற்கு ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் தடைகளை விதித்துள்ளது. இந்த தடைகளை மீறி சோதனை நடத்துவதற்காக அந்தநாட்டின் மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் வடகொரியா அண்மைக்காலமாக அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்தச்சூழலில் சுயாதீன தடைகள் கண்காணிப்பாளர்கள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் வடகொரியா மீதான தடைகளுக்கான குழுவிடம் தங்களது ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

 

அணுசக்தி சோதனைகள் அல்லது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், வடகொரியா அணுக்கரு பிளவு பொருட்களை உற்பத்தி செய்வதற்கான அதன் திறனை தொடர்ந்து வளர்த்துக்கொண்டுள்ளது. அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை உள்கட்டமைப்பை வடகொரியா தொடர்ந்து பராமரித்து மேம்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களுக்கான பொருட்கள், தொழில்நுட்பம், வெளிநாடுகளில் இருக்கும் இந்தத் திட்டங்களுக்கான அறிவு ஆகியவற்றை இணைய வழிகள் மற்றும் கூட்டு அறிவியல் ஆராய்ச்சி மூலம் வடகொரியா தொடர்ந்து தேடி வருகிறது. சைபர் தாக்குதல்கள் குறிப்பாக கிரிப்டோ சொத்துக்கள் மீது நடத்தப்படும் சைபர் தாக்குதல்கள், வடகொரியாவின் வருமானத்திற்கு முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது.

 

2020 முதல் 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரையிலான காலகட்டத்தில், வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருந்து குறைந்தது மூன்று கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களிலிருந்து வடகொரியா சைபராக்டர்கள் (cyberactors) 50 மில்லியனுக்கும் அதிகமான டாலர்களை திருடியுள்ளனர் என உறுப்பு நாடுகளில் ஒன்று தெரிவித்துள்ளது. இவ்வாறு சுயாதீன தடைகள் கண்காணிப்பாளர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கிம் ஜாங் உன் போட்ட திடீர் உத்தரவு; மீண்டும் பரபரப்பில் வடகொரியா

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kim Jong Un's sudden order; North Korea is in a frenzy again

அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கி இருக்கும் நாடு வடகொரியா. அதேபோல் சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். அண்மையில் ஏவுகணைகளை வீசி கொரிய தீபகற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள வடகொரியாவில் வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடகொரியாவில் நடக்கும் நிகழ்வுகள் வெளி உலகத்திற்கு கசிந்து விடக்கூடாது எனவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் வடகொரியா அண்டை நாடுகளான ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி விட்டு பயமுறுத்தி வருகிறது.

இந்நிலையில் போருக்கு எப்போதும் தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்திற்கு கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'கிம் ஜாங் உன்-2' என்ற அரசியல் மற்றும் ராணுவத்திற்கான பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து கிம் ஜாங் உன், நம்மைச் சுற்றியுள்ள நாடுகளில் அரசியல் சூழ்நிலை, நிலையாக இல்லாதது குறித்து பேசியதோடு, இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எப்போதும் இல்லாத அளவிற்கு வடகொரியா ராணுவத்தினர் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 'கிம் ஜாங் உன்-2' பல்கலைக்கழகத்தில் அவர் ஆய்வு செய்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Next Story

“தென்கொரியாவை தூண்டும் நாடுகளை அழித்துவிடுவோம்” - வடகொரியா பகிரங்க எச்சரிக்கை

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
North Korea's warning on We will destroy countries that provoke South Korea

அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கியிருக்கும் நாடு வடகொரியா. அதேபோல சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.  ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் கிம் ஜாங் உன், அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி பயமுறுத்தி வருகிறார். அதோடு மட்டுமல்லாமல், அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி அடிக்கடி பல்வேறு ஏவுகணை சோதனைகளை அவர் நிகழ்த்தி வருகிறார்.

இதற்கிடையே, வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக, சில தினங்களுக்கு முன் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா திடீரென பீரங்கி தாக்குதல் நடத்தியது. வடகொரியா வீசிய 200க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகள் யோன்பியோங் தீவுக்கு அருகே இருநாட்டிற்கும் இடையேயான பாதுகாக்கப்பட்ட மண்டலமான கடல் பகுதியில் விழுந்தன. இதனால், இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. 

இந்த நிலையில், தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல், உக்ரைன் மீதான தாக்குதலில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவிக்கரம் நீட்டியுள்ளது. மேலும், அமெரிக்கா - தென் கொரியா நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி, தென்கொரியாவில் அமெரிக்காவின் குண்டு வீசும் விமானங்கள், அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற சக்தி வாய்ந்த ராணுவத் தளவாடங்களை அமெரிக்கா நிறுத்தி வைத்திருக்கிறது. இதனால், வடகொரியா அதிபர், தென்கொரியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து, வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், “தென்கொரியா எங்கள் முக்கியமான எதிரி. தென்கொரியாவை தூண்டும் நாடுகளை அழித்துவிடுவோம்” என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.