வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Nobel Prize in Chemistry Announcement for 2024

மனிதக் குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகின்றன.

அதன்படி, விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இரண்டு நபருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்று முன்தினம் (07.10.2024) அறிவிக்கப்பட்டது. மரபணு ஒழுங்கு முறை சிகிச்சைக்குப் பிறகு மைக்ரோ ஆர்.என்.ஏ. என்ற செல்லின் செயல்பாடு குறித்த ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்பட்ட உள்ளது. அதனைத் தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று (08.10.2024) அறிவிக்கப்பட்டது. அதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்ட், கனடாவைச் சேர்ந்த ஜியோஃப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகள் மூலம் இயந்திர கற்றலை செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான (2024) வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாக இன்று (09.10.2024) அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 2024ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு டேவிட் பெக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் எம். ஜம்பர் ஆகியோர் பெற உள்ளனர். புரதம் வடிவமைப்பு, கட்டமைப்பு குறித்த ஆராய்ச்சிக்காக மூவருக்கும் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

chemistry scientist
இதையும் படியுங்கள்
Subscribe