சீனா, ரஷ்யா இல்லாததால் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு பிரகாசம்! 

With no China or Russia, India's medal chances are bright!

தமிழகத்தில் நடைபெற உள்ள 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இருந்து விலகுவதாக சீனா தெரிவித்துள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லப்புரத்தில் வரும் ஜூலை மாதம் 28- ஆம் தேதி அன்று செஸ் ஒலிம்பியாட் தொடங்கவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்க 187 நாடுகள் பதிவு செய்திருக்கும் நிலையில், ஒலிம்பியாட் தொடர் வரலாற்றில் அதிக நாடுகள் பதிவு செய்துள்ள தொடராக இது அமைந்துள்ளது. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரில் இருந்து சீனா விலகியுள்ளது. எனினும், அதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

செஸ் ஒலிம்பியாட் தொடரில் சீனா, 2014, 2018 ஆம் ஆண்டுகளில் ஓபன் பிரிவில் தங்கம் வென்றது. சீன மகளிர் அணியினர் இதற்கு முன் நடந்த இரண்டு தொடர்களிலும் தங்கம் வென்றுள்ளனர். உக்ரைன் மீதான தாக்குதல் காரணமாக, மற்றொரு பலம் வாய்ந்த அணியான ரஷ்யாவுக்கு ஏற்கனவே, தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனா,ரஷ்யா அணிகள் பங்கேற்காததால் இந்திய அணிக்கு பதக்க வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

Chess china Russia
இதையும் படியுங்கள்
Subscribe