Skip to main content

கையில் பணமில்லை என்று சொன்ன 1.5 லட்சம் கோடிக்கு சொந்தகாரர்!

Published on 11/12/2019 | Edited on 12/12/2019


பிரபல அமெரிக்க தொழிபதிபர் எலன் மஸ்க், தனது நிறுவனங்களின் சொத்து மதிப்பு 1.5 லட்சம் கோடி என்றாலும் என் கையில் அந்த அளவு பணமில்லை என வெளிப்படையாக பேசியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வெர்னான் அன்ஸ்வொர்த் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதற்காக, மானநஷ்ட வழக்கை சந்தித்து வருகிறார் தொழிலதிபர் எலன் மஸ்க். இந்த வழக்கு விசாரணை தற்போது, அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
 

gh



அப்போது, நீதிபதி மஸ்கிடம் உங்களின் சொத்து மதிப்பு என்ன, எவ்வளவு பணம் தற்போது வைத்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மஸ்க், என் கையில் ரொக்கமாகப் பணம் இல்லை என பதிலளித்துள்ளார். இவரின் பதிலால் அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆனார் அம்பானி

Published on 17/03/2022 | Edited on 17/03/2022

 

 Ambani becomes Asia's richest man!

 

தொழிலதிபர் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற நிலையை எட்டியுள்ளார்.

 

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 103 பில்லியன் டாலர் எனக் கணக்கிடப்பட்டுள்ள நிலையில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற நிலையை எட்டியுள்ளார். அம்பானியின் கடந்தாண்டு சொத்து மதிப்பை ஒப்பிடுகையில் இந்தாண்டு 24 சதவிகிதம் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. அம்பானிக்கு அடுத்ததாக இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக அதானி நிறுவனத்தின் கவுதம் அதானி உள்ளார். அதானியின் சொத்து மதிப்பு 83 பில்லியன் டாலராக உள்ளது. கடந்தாண்டு மட்டும் அவரது சொத்து மதிப்பு 49 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. மூன்றாவது இடத்தில் நைகா நிறுவனர் ஃபால்குனி  நாயர் பில்லியனர் வரிசையில் இணைந்துள்ளார்.

 

 

Next Story

27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த பில்கேட்ஸ் - மெலிண்டா!

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

bill gates- melinda

 

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் பில் கேட்ஸ். இவரும் மெலிண்டாவும் 1987இல் முதல்முறையாக சந்தித்துக்கொண்டனர். மெலிண்டா மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ப்ராடக்ட் மானேஜராக பணியில் சேர்ந்தார். இதன்தொடர்ச்சியாக இருவருக்குள்ளும் தொடங்கிய நட்பு 1994ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது.

 

இதன்பிறகு 27 ஆண்டுகள் நீடித்திருந்த இவர்களது திருமண உறவு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பில் கேட்ஸும்  மெலிண்டாவும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். பில்கேட்ஸ்க்கு தற்போது 65 வயதாகிறது. மெலிண்டா கேட்ஸ்க்கு தற்போது 54 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் இருவரும் இணைந்து பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பை நிறுவி பொது சுகாதாரம், கல்வி, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் சேவையாற்றி வரும் நிலையில், இருவரும் பிரிவது பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனைப் பாதிக்குமா என கேள்வியெழுந்தது.

 

இந்தநிலையில், பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா இருவரும், பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனின் தலைமை பொறுப்பை வகிப்பார்கள் என அந்த ஃபவுண்டேஷனின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் 1.75 பில்லியன் அமெரிக்க டாலர்களை கரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்கும், மற்ற தடுப்பூசி பணிகளுக்கும் ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.