Skip to main content

பெண் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துவர நைஜீரிய அரசின் புதிய முயற்சி!

Published on 04/03/2018 | Edited on 04/03/2018

பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவைக்க நைஜீரிய அரசு புதிய முயற்சி ஒன்றை கையாள முடிவு செய்துள்ளது.

 

Nigeria

 

ஆப்பிரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் இருக்கும் நாடு நைஜீரியா. இங்கு மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே வறுமையும், ஊழலும் பரவிக்கிடக்கிறது. பாரம்பரிய சமூகச் சூழலில் வாழும் இந்த மக்கள், இயல்பாகவே பெண் குழந்தைகளுக்கான கல்வியைத் தவிர்த்து வந்தனர். ஆனால், அதிலிருந்து மீண்டு தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப அவர்கள் நினைத்தாலும், தற்போது அது முடியாத காரியமாகி விட்டது. 

 

இந்நிலையில், பெற்றோர் தங்களது பெண் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப நைஜீரிய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, பெண் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பினால், அரசு தரப்பிலிருந்து பெற்றோருக்கு ஆண்டுதோறும் 47 டாலர்கள் (அ) ரூ.2,700 நல உதவியாக பெற்றோருக்கு வழங்கப்படும். இருந்தாலும், சர்வதேச குழந்தைகள் அமைப்பான யூனிசெப் 2014ஆம் ஆண்டே இதே திட்டத்தை நைஜீரியாவில் அறிமுகப்படுத்தியது. தற்போது, அந்நாட்டு அரசும் அதே முயற்சியை மேற்கொண்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆட்டோ ஓட்டுநரால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Auto driver arrested under POCSO Act for misbehaving with girl

சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் தொட்டிப்பெட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய  மகன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித் (27).  இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது  சிறுமியை ஆசை வார்த்தை கூறி, வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.   

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம்  தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர்கள்  கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் கோவிந்தராஜன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித்தை போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகிறார்.