நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இருவேறு மசூதிகளில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் பலியானதாகவும், 20 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதில் ஹைதரபாத்தைச் சேர்ந்த அகமது இக்பால் ஜஹாங்கீர் என்பவர் அந்தத் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்துள்ளார். இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மேலும் 31 வயது ஐடி பணியாளர் ஃபர்காஜ் அஸ்ஸன் எங்குள்ளார் என்று தெரியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Show comments