Skip to main content

ஜமால் கஷோகி வழக்கில் திடீர் திருப்பம்... மகனின் முடிவால் குற்றவாளிகளின் தூக்குத்தண்டனை ரத்து...

Published on 10/09/2020 | Edited on 10/09/2020

 

new verdict on jamal khashoggi case

 

பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் முதல் மனைவியின் மகன் சலா கஷோகி, தன் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டதாகக் கூறியதையடுத்து குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

 

சவுதி அரசையும் அதன் இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக விமர்சித்த பத்திரிகையாளர் ஜமால் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்.2 -ஆம் தேதி துருக்கி பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக ஆவணங்களைப் பெறத் துருக்கி சென்றார். அங்கு இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரகத்தில் அவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் எட்டு பேர் குற்றவாளிகள் என்று சவுதி நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. மேலும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நெருக்கமான அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது. 

 

நீதிமன்ற தீர்ப்பின்படி, குற்றவாளிகளான எட்டு பேரில் ஐந்து பேர் தூக்கிலிடப்படுவார்கள் எனவும், மேலும் மூன்று பேர் 24 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், எட்டு பேர் மீதான குற்றம் மட்டுமே நிரூபிக்கப்பட்டது. இந்நிலையில், ஜமால் கஷோகியின் முதல் மனைவியின் மகன் சலா கஷோகி, தன் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டதாகக் கூறியதையடுத்து குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

 

குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, 20 ஆண்டுக்காலம் சிறைத் தண்டனை வழங்கி சவுதி நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. அதேபோல 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட மூவருக்கும் தண்டனை காலம் குறைக்கப்பட்டு, 7 முதல் 10 ஆண்டுக் கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரபிக் கடலில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்; நடுக்கடலில் பரபரப்பு

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
incident on a commercial ship in the Arabian Sea!

சவுதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது.  

சவுதி அரேபியாவிலிருந்து மங்களூருக்கு எம்.வி.செம் என்ற வணிகக் கப்பல் கச்சா எண்ணெய் ஏற்றி வந்தது. அந்த கப்பல் குஜராத் மாநிலம், போர்பந்தர் பகுதியிலிருந்து 217 கடல் மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தபோது கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில், கப்பல் தீப்பிடித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட தகவலை அடுத்து கடலோர படையினர் உதவிக்கு விரைந்தனர்.

அங்கு விரைந்த கடலோர படையினர், கப்பலில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். அதன் பின்னர், கப்பலில் இருந்த 20 இந்தியர்கள் உட்படக் கப்பலில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தீ பற்றியதால் கப்பலை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு இந்திய கடற்படை போர்க்கப்பலும் அங்கு விரைந்துள்ளது.

இது குறித்து கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது, “சவுதி அரேபியாவிலிருந்து மங்களூருக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது தாக்குதல் நடந்துள்ளதாகத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல்படை அதிகாரிகள், அங்கு விரைந்து உதவ புறப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார். 

Next Story

சவுதி அரேபியா விமான நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல்!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

saudi arabia airport

 

சவுதி அரேபியாவின் ஜிசான் நகரில் அமைந்துள்ள கிங் அப்துல்லா விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் ஆறு சவுதி அரேபியர்களும், மூன்று வங்க தேசத்தவர்களும், சூடான் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் காயமடைந்துள்ளனர். மேலும், விமான நிலையத்தின் சில முகப்பு ஜன்னல்களும் உடைந்துள்ளன.

 

இந்த ட்ரோன் தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், சவுதி அரேபியாவைக் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல்களை நடத்தும் ஹவுதி அமைப்பே இந்த தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

 

ஏமன் நாட்டில் அதிபர் அப்தரபு மன்சூர் ஹாடி தலைமையிலான அரசுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் மோதல் நடந்துவருகிறது. இந்த மோதலில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான படைகள் ஹவுதி அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்திவருகின்றன. இதனையடுத்து ஹவுதி அமைப்பு, சவுதி அரேபியாவைக் குறிவைத்து தாக்குதல்களை நிகழ்த்திவருகிறது. ஹவுதி அமைப்புக்கு ஈரான் ஆதரவளித்துவருவது குறிப்பிடத்தக்கது.