பல்வேறு மரபணு பிறழ்வுகளுடன் கூடிய புதிய வகை கரோனா திரிபு கண்டுபிடிப்பு!

corona

உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது மீண்டும் கரோனாபாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை கரோனாபாதிப்பு மீண்டும் ஆட்டிவைக்கத்தொடங்கியுள்ளது. அதேபோல் தென் ஆப்பிரிக்காவிலும்அண்மைக்காலமாக கரோனாபாதிப்பு அதிகரித்து வந்தது.

இந்தநிலையில்தற்போது அந்தநாட்டில், பல்வேறு மரபணு பிறழ்வுகளைக் கொண்ட புதிய வகை கரோனாதிரிபை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாகஅந்தநாட்டின் வைராலஜிஸ்ட் துலியோ டி ஒலிவேரா,துரதிர்ஷ்டவசமாக, தென்னாப்பிரிக்காவில் ஒரு புதிய கரோனா திரிபை கண்டறிந்துள்ளோம். இது கவலைக்குரியது" எனக் கூறியுள்ளார்.

pandemic South Africa
இதையும் படியுங்கள்
Subscribe