நேபாளநாட்டைச்சேர்ந்தவர்கே.பி.சர்மா ஒலி. ஆளும்நேபாளகம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்தஇவருக்கும், நேபாளநாட்டின்முன்னாள் பிரதமர் புஷ்பகமல்தஹாலுக்கும் அதிகாரப் போட்டி நடந்துவந்தது.
இந்தநிலையில், இருவருக்கும் இடையேயான மோதல், அவசரச் சட்டம் தொடர்பாக பெரிதாக வெடித்தது. இதனைத்தொடர்ந்து, பிரதமர்கே.பி.சர்மா ஒலி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இது புஷ்பகமல்தஹால்குழுவுக்குஅதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் இன்றுபுஷ்பகமல்தஹால்தலைமையில்அவரதுஆதரவாளர்கள் கூட்டம்கூடியது. அதில், பிரதமர்கே.பி.சர்மா ஒலியை, கட்சியின்தலைவர் பதவியிலிருந்து நீக்கியதோடு, புதிய தலைவராக, புஷ்பகமல்தஹால்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், நாடாளுமன்றகுழுத்தலைவர் பதவியிலிருந்தும் கே.பி.சர்மாஒலி நீக்கப்பட்டு, அப்பொறுப்புக்கும் புஷ்பகமல் தஹால்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.