நேபாளநாட்டைச்சேர்ந்தவர்கே.பி.சர்மா ஒலி. ஆளும்நேபாளகம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தஇவருக்கும், நேபாளநாட்டின்முன்னாள் பிரதமர் புஷ்பகமல்தஹாலுக்கும் அதிகாரப் போட்டி நடந்துவந்தது.
இந்நிலையில், இருவருக்கும் இடையேயான மோதல், அவசரச் சட்டம் விவகாரத்தில் பெரிதாக வெடித்தது. இதனைத்தொடர்ந்து, பிரதமர்கே.பி.சர்மா ஒலி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இது புஷ்பகமல்தஹால்குழுவுக்குஅதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து புஷ்பகமல்தஹால்தலைமையில்அவரதுஆதரவாளர்கள் கூட்டம்கூடி, பிரதமர்கே.பி.சர்மா ஒலியை, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின்தலைவர் பதவியிலிருந்து நீக்கியது. மேலும் ‘அரசியல் சாசனத்திற்கு எதிராக நீங்கள் எடுத்த முடிவிற்காகஏன் உங்களைக் கட்சியில் இருந்து நீக்க கூடாது’ எனவிளக்கம் கேட்டுபிரதமர்கே.பி.சர்மா ஒலிக்குநோட்டீஸ்அனுப்பியது.
இந்நிலையில், அந்த நோட்டீஸிற்குப் பதிலளிக்காததல் பிரதமர்கே.பி.சர்மா ஒலியை கட்சியை விட்டு நீக்குவதாக,புஷ்பகமல்தஹால்தலைமையிலான குழு அறிவித்துள்ளது.