Skip to main content

செவ்வாய் கிரகத்தில் 16 அடி ஆழத்திற்கு துளையிடப்போகும் இன்சைட்...!

Published on 27/11/2018 | Edited on 27/11/2018

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த மே மாதம் 5-ம் தேதி இன்சைட் எனும் விண்கலத்தை விண்ணில் ஏவியது. கிட்டத்தட்ட 7 மாதங்கள் கழித்து நேற்று (26-ஆம் தேதி) இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. 

 

ii

 

 

இதற்கு முன் பல விண்கலங்கள் செவ்வாய் கிரகத்திற்கு சென்றியிருந்தாலும் இன்சைட் தனித்துவம் வாய்ந்தது. காரணம் இன்சைட் விண்கலத்திற்கு முன் செவ்வாய் கிரகத்திற்கு சென்ற விண்கலம் எல்லாம் அதன் மேற்பரப்பில் மட்டுமே ஆய்வு செய்திருக்கின்றன. இறுதியாக நாசாவில் இருந்து ஏவப்பட்ட கியூரியாசிட்டி விண்கலம் மட்டுமே செவ்வாயின் நிலப்பரப்பில் ஒரு இன்ச் அளவிற்கு துளையிட்டு ஆய்வு செய்தது. ஆனால், இன்சைட் விண்கலம் இதுவரை எந்த விண்கலமும் செய்யாத அளவில் செவ்வாயின் மேற்பரப்பில் 16 அடி ஆழம் வரை துளையிட்டு செவ்வாய் கிரகத்தின் அடியில் தண்ணீர் இருக்கிறதா என்று ஆய்வு செய்ய உள்ளது. 

 

 

செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தினுள் நுழையும்போது, செவ்வாயின் வளிமண்டலத்தில் ஏற்படும் உராய்வு கரணமாக விண்கலம் தீ பிடிக்கும். அதனை சமாளிக்கும் வகையில் இன்சைட் விண்கலத்தின் மேல் ஒரு ஷீல்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. அது இன்சைட் விண்கலத்தை செவ்வாய் வளிமண்டலத்தில் ஏற்படும் தீயில் இருந்து காப்பாற்றும். இந்த செயல்பாடுகள் முடிந்து செவ்வாய் கிரகத்தில் இன்சைட் தரை இறங்க ஏழு நிமிடங்கள் ஆகியிருக்கிறது. இந்த ஏழு நிமிடமும் அடுத்தது என்ன நடக்கும், பாதுகாப்பாக இன்சைட் தரை இறங்குமா என ஒவ்வொரு நிமிடமும் விஞ்ஞானிகள் பதட்டத்துடன் இருந்தனர். ஆனால் இருதியாக இன்சைட் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி முதல் புகைபடத்தையும் நாசாவிற்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விண்வெளி செல்லும் இந்திய வீரர்கள்; பிரதமர் மோடி அறிவிப்பு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Prime Minister Modi's announcement on Indian astronauts in space

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி இன்று (27-02-24) காலை கேரளா சென்றார். அதனையடுத்து, அவர் அங்குள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்குச் சென்று ககன்யான் திட்டப்பணிகள் குறித்த பணிகளை ஆய்வு செய்தார். அவருடன், கேரளா ஆளுநர் ஆரிஃப் கான், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இருந்தனர். 

இதனையடுத்து, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்லும் 4 வீரர்களைப் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். அதன்படி, குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷுசுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லவுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு மிஷன் லோகா பேட்ஜ்களை பிரதமர் மோடி வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “தேர்ந்தெடுக்கப்பட்ட 4 விண்வெளி வீரர்களைச் சந்தித்து அவர்களை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய இந்தியாவின் பெருமை நீங்கள் தான்” என்று கூறினார். 

Next Story

“8 ஆண்டுகளில் நாம் செவ்வாய்க் கிரகத்தில் இறங்கியிருப்போம்” - எலான் மஸ்க்

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
elon musk about space x attempt 3rd time

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நிலவிற்கும், செவ்வாய் கோளிற்கும் மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஸ்டார்ஷிப் ராக்கெட் ஒன்றை உருவாக்கி, அதை செயல்படுத்தும் முயற்சியில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ராக்கெட், 33 என்ஜின்களுடன் 400 அடி உயரத்தில், உலகின் மிகப்பெரிய ராக்கெட் என்ற சிறப்பம்சத்துடன் தயாரானது. 

இந்த ராக்கெட்டின் முதற்கட்ட சோதனை கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த நிலையில், ராக்கெட்டின் ஒரு பகுதியான பூஸ்டர் ராக்கெட் செயல்படாததால் ஏவப்பட்ட 4 நிமிடங்களிலே வெடித்துச் சிதறியது. பின்பு பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு மீண்டும் கடந்த நவம்பர் மாதம் இரண்டாவது சோதனை முயற்சி நடத்தப்பட்டது. அப்போது, ராக்கெட்டிலிருந்து விண்கலம் தனியாகப் பிரிந்த பிறகு பூஸ்டர் வெடித்துச் சிதறியது. 

இந்த நிலையில் மூன்றாவது சோதனை முயற்சி, அடுத்த மாதமான பிப்ரவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்திடம் அனுமதி பெற்றதும் மூன்றாவது சோதனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எலான் மஸ்க், “இன்றிலிருந்து அடுத்த 8 ஆண்டுகளில் நாம், செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கி இருப்போம். நிலவுக்கும் மனிதர்களை அனுப்பியிருப்போம். செவ்வாய்க் கிரகத்தில் வாழ நிறைய வேலைகள் இருக்கிறது. மூன்றாவது ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் சோதனை இந்த ஆண்டு வெற்றி பெறும் என்று நம்புகிறேன்” என்றார்.