Skip to main content

அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத மிருகம்...!

Published on 05/08/2020 | Edited on 05/08/2020

 

mystery creature

 

இங்கிலாந்து நாட்டின் அயின்ஸ்டேல் கடற்கரையில் அழுகிய நிலையில் ஒரு மிருகத்தின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. பார்ப்பதற்கே கொடூரமான தோற்றத்துடன் காட்சியளிக்கும் அந்த மிருகத்தின் சடலம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. அது மீன் இனத்தை சேர்ந்ததா அல்லது வேறு ஏதேனும் கடல் உயிரின வகையை சேர்ந்ததா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அழுகிய நிலையில் இருந்த சடலத்தில் இருந்து அதிக அளவில் துர்நாற்றம் வீசியதால் அதை அங்கிருந்து அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இதற்கிடையில் 'இது மேமத் உயிரினமாக இருக்கும்' என்று ஒரு சாராரும், இல்லை 'இது திமிங்கலமாக இருக்கலாம்' என்று மற்றொரு சாரரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'13 ஆம் எண்... சாத்தானிய வழிபாடு'- கேட்டாலே திகில் பற்றும் மர்மம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
'Number 13...Satanic Worship'-Mystery in Kerala

மாந்திரீகம், நரபலி என மர்மங்களுக்கு பெயர் போனது கேரளா. அண்மையாகவே கேரளாவில் நரபலி கொடுக்கும் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் மர்மமான நிகழ்வு ஒன்று கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

கேரளாவில் 'சாத்தான் மதம்' என்ற ஒரு மதம் வளருவதாகவும், பெரும் பணக்கார புள்ளிகள்கூட அந்த மதத்தில் இணைவதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கல்லூரி பேராசிரியர் மற்றும் அவரது மனைவி, மகள், உறவினர் ஆகிய நான்கு பேர் சடலமாக கிடந்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் கொல்லப்பட்டது தெரியவந்தது.

இந்த கொலையை நிகழ்த்தியது யார் என்ற தொடர் விசாரணையில் இந்த தம்பதியின் மகனான கேடல் என்பவர்தான் அந்த கொலைகளை செய்தது தெரியவந்தது. கோடாரியை பயன்படுத்தி தங்களது குடும்ப உறுப்பினர்களை கேடல் கொலை செய்துள்ளார். இது குறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சாத்தானிய வழிபாடு தான் இதற்கெல்லாம் காரணம் என்பது கூறப்படுகிறது.

இந்நிலையில் இரு நாட்களுக்கு முன்பு அருணாச்சல பிரதேசத்தில் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த நவீன் தாமஸ், தேவி என்ற ஆயுர்வேத மருத்துவர்கள், ஆர்யா நாயர் என்ற ஆசிரியை ஆகிய மூவரும் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

உயிர்த்தெழுந்த பிறகு வேறு ஒரு கிரகத்தில் வாழ வாய்ப்பு கிடைக்கும் என அவர்கள் நம்பியதாகவும், சாத்தான் வழிபாட்டில் நம்பிக்கை கொண்டிருந்ததும் தெரியவந்தது. எதிரிகளை பழிவாங்க, பணம் சொத்துக்களை பெற கேரளாவில் சாத்தானிய வழிபாடுகள் பின்பற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக திருவனந்தபுரம், கொச்சி, கோட்டயம், ஆலப்புழா, கோழிக்கோடு நகரங்களில் அதிகமானோர் சாத்தானிய வழிபாடுகளை பின்பற்றுவது தெரியவந்துள்ளது. மக்கள் அதிகம் நடமாடாத பகுதிகளில் இருக்கும் தனி வீடுகளில் கூடி தங்களது மதத்தை வளர்த்து வருவதாகவும், இந்த சாத்தான் வழிபாடு செய்பவருக்கு 13 ஆம் எண் மிகவும் பிடித்தமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Next Story

கொளத்தூரில் மர்ம பொருள் வெடிப்பு; போலீசார் விசாரணை!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Mysterious substance explosion in Kolathur

கொளத்தூரில் வீடு ஒன்றில் மர்மப் பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கொளத்தூர் முருகன் நகர் 2வது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் - சிவப்பிரியா தம்பதி. இவர்களுக்கு ஆதித்ய பிரணவ் என்ற மகன் உள்ளார். அவர் பிளஸ் டூ படித்து வந்தார்.  அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட  ஆதித்ய பிரணவ் பல்வேறு கெமிக்கல்கள் பயன்படுத்தி கண்டுபிடிப்புகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த வீட்டில் இருந்து திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் மாணவன் ஆதித்ய பிரணவ் உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அறிவியல் ஆராய்ச்சி தொடர்பாக வேதிப் பொருட்களை பயன்படுத்திய போது விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மீண்டும் அதே வீட்டில் மர்மப் பொருள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியில் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு தீயணைப்பு வாகனமும் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிகப்படியான போலீசார் அங்கு குவிந்துள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.