Advertisment

இந்தியாவில் மாயமான வங்கதேச எம்.பி சடலமாக மீட்பு!

Mysterious Bangladeshi MP recovered in India

வங்காள தேச நாட்டில் ஷேக் ஹசீனா தலைமையில் அவாமி லீக் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சியின் எம்.பியாக பொறுப்பு வகித்து வருபவர் அன்வருல் அசிம்.

Advertisment

இந்த நிலையில், அன்வருல் அசிம் கடந்த 12ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தாவுக்கு வந்து, பாராநகர் பகுதியில் தனது நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். இதனையடுத்து, அடுத்த நாள் வெளியே சென்ற அன்வருல் அசிமி பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அசிமின் நண்பர், அவரின் செல்போன் எண்ணை தொடர்புகொண்டு அழைத்துள்ளார். ஆனால், எந்தவித பதிலும் வராததால், அதிர்ச்சியடைந்த அவரது நண்பர், இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

Advertisment

மேலும், இந்த சம்பவம் குறித்து வங்காளதேச தூதரகம் போலீசில் புகார் அளித்திருந்தது. அதன்படி, வங்காள தேச எம்.பி அன்வருல் அசிம்மை கண்டுபிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் இறங்கி வந்தனர். இந்த நிலையில், கொல்கத்தா நியூ டவுன் பகுதியில் அன்வருல் அசிம் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘நாங்கள் பலரை விசாரித்து, விரிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளோம், அதன் மூலம்தான் அவர் கொலை செய்யப்பட்டதை உறுதிப்படுத்த முடியும்’ எனக் கூறுகின்றனர். மேலும், இது தொடர்பாக வங்காளதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கூறுகையில், ‘இதுவரை, சம்பந்தப்பட்ட கொலையாளிகள் அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இது திட்டமிட்ட கொலை. இதுவரை வங்கதேசத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் இந்தியர் எவருக்கும் தொடர்பு இல்லாததால், இந்தியாவுடனான உறவில் மோசமடையும் வகையில் எதுவும் இங்கு நடக்கவில்லை’ என்றார்.

kolkata Bangladesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe