Skip to main content

"பாம்புகள் எனது குழந்தைகள்!" - அடைக்கலமளித்து பாதுகாக்கும் புத்த மதத் துறவி!

Published on 04/12/2020 | Edited on 04/12/2020

 

wilatha

 

மியான்மரைச் சேர்ந்த புத்த மதத் துறவி விலாதா. 69 வயதான இவர், மியான்மரின் யங்கானில் பாம்புகளுக்குப் புகலிடம் அமைத்து, அவற்றைப் பாதுகாத்து வருகிறார். இவர் அடைக்கலம் தரும் பாம்புகளில், சாதாரண விஷமற்ற பாம்புகள் மட்டுமல்ல, ஆளையே விழுங்கக்கூடிய மலைப் பாம்புகளும், ராஜ நாகங்களும் அடக்கம்.

 

இவர் பாதுகாத்து வரும் பாம்புகள், அவர் மீது ஏறி விளையாடுகிறது. அவரும் பாம்புகளை மடியில் வைத்துத் தடவிக் கொடுக்கிறார். பாம்புகளைத் தனது குழந்தைகள் என்றே கூறுகிறார் விலாதா. இவர் பாம்புகளுக்கு அடைக்கலம் தருவதன் காரணம், அவற்றின் மீதான பாசம் மட்டுமல்ல, அவற்றை அழிவிலிருந்து காக்கும் முயற்சியும் கூட.

 

மியான்மர் நாட்டில், பாம்புகள் பிடிபட்டால் ஒன்று கொல்லப்பட்டுவிடும் இல்லையென்றால் கள்ளச் சந்தையில் விற்கப்பட்டுவிடும். இதனால், பாம்புகள் அழிவதை தடுக்கத்தான், அவற்றிற்குப் புகலிடம் அளித்துப் பாதுகாக்கிறார் புத்த மதத் துறவி விலாதா. இதுபற்றி அவர் கூறும்போது, மக்கள் பாம்புகளைப் பிடித்துவிட்டால், அவற்றை விற்க வாடிக்கையாளர்களை தேடுவதாகக் கூறுகிறார். மேலும், புத்த மத நாடான மியான்மரில் இப்படி ஒரு சரணாலயம் அமைந்திருப்பதால், மக்கள் பாம்புகளைக் கொல்லாமலோ, விற்காமலோ துறவிகளிடம் தருவதன்மூலம் மேன்மை பெறலாம் எனக் கூறுகிறார் விலாதா.

 

புத்த மதத் துறவி அமைத்துள்ள, இந்தப் பாம்புகள் சரணாலயத்திற்கு, பொதுமக்கள், தீயணைப்புத் துறையினர் எனப் பலரும் பாம்புகளைக் கொண்டுவந்து தருகின்றனர். அவைகளைப் பாதுகாக்கும் விலாதா, அவைகள் திரும்பக் காட்டிற்குச் செல்லலாம் எனத் தோன்றும்போது காட்டில் கொண்டு சென்று விட்டு விடுகிறார். ஆனாலும், கெட்டவர்களிடம் சிக்கினால் அவர்கள் அவற்றைக் கள்ளச் சந்தையில் விற்றுவிடுவார்கள் என்பதால், அவை திரும்பப் பிடிபட்டால் அது தனக்கு வேதனையைத் தரும் எனக் கூறுகிறார் விலாதா.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ரூ. 280 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்! 

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
worth Rs 280 crore seized in Chennai

சென்னையில் ரூ. 280 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் கடந்த 10 ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்துள்ளார். இந்த சூழலில் அவர் போதைப்பொருள் கடத்த இருப்பதாகப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தப் புகாரின் பேரில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனியார் விடுதியில் உதயகுமார் தங்கியிருந்த அறையில் சோதனை மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது பெரம்பூரில் உள்ள அக்பர் அலி என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 280 கோடி மதிப்புள்ள 56 கிலோ போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருளை மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக இலங்கைக்கு கடந்த முயன்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

Next Story

பதுங்கி இருந்த மஞ்சள் சாரை; தெறித்து ஓடிய நோயாளிகள்

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

A snake entered the private hospital and the patients ran screaming

 

ஈரோடு பெருந்துறை சாலையில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு நோய் காரணமாக ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையின் முதல் தளத்தில் இருக்கும் நோயாளி ஒருவரின் சிகிச்சை அறையில் உள்ள ஜன்னலில், 8 அடி நீளத்தில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதைக் கண்ட அந்த நோயாளி அலறியடித்துச் சென்று மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.

 

இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த பாம்பு பிடி வீரர் யுவராஜ், ஜன்னலில் படுத்திருந்த பாம்பை லாவகமாகப் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அப்போது, பிடிபட்ட பாம்பு 8 அடி நீளம் உள்ள மஞ்சள் சாரை என்றும், மருத்துவமனை அருகில் உள்ள முட்புதரில் இருந்து வந்திருக்கலாம் என்றும் பாம்பு பிடி வீரர் யுவராஜ் தெரிவித்தார்.