ADVERTISEMENT

பாகிஸ்தான் உளவுத்துறை தான் புல்வாமா தாக்குதலுக்கு காரணம்- முஷாரப் பரபரப்பு பேச்சு

02:41 PM Mar 07, 2019 | kirubahar@nakk…

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பால்கோட் பகுருதியில் தாக்குதல் நடத்தியது. இந்நினையில் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பாகிஸ்தானிலிருந்து செயல்படவில்லை என பாகிஸ்தான் மறுத்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் அதிபரான முஷாரப், பாகிஸ்தான் உளவுத்துறைதான் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை பயன்படுத்தி இந்தியா மீது இந்த தாக்குதலை நடத்தியது என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை நான் வரவேற்கிறேன். அந்த அமைப்பு என்னை 2 முறை கொல்லப் பார்த்தது. ஆனால் அப்போது இருந்த சூழல் காரணமாக என்னால் அந்த அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என கூறினார். முஷாரஃபின் இந்த கருத்து இந்தியாவிலும் மற்ற உலகநாடுகள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT