ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அமைப்பை உருவாக்கியமுல்லாஉமர் கடந்த 2013 ஆம் ஆண்டு காசநோயால் உயிரிழந்த நிலையில், அவரின் காரை 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானின் ஒருகிராமத்திலிருந்து தாலிபான்கள் தோண்டி எடுத்துள்ளனர்.
உலகையே உலுக்கிய நிகழ்வான அமெரிக்க இரட்டை கோபுரதாக்குதலுக்குபிறகுஅமெரிக்கபடைகள் ஆப்கானிஸ்தானில் தேடுதல் வேட்டை நடத்தினர். அந்த நேரத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அமைப்பை உருவாக்கியமுல்லாஉமரின் வெள்ளை நிறடொயோட்டாகார்கிழக்கு ஆப்கானிஸ்தானின் ஒரு கிராமத்தில் புதைக்கப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கும் நிலையில்,முல்லாஉமரின் வெள்ளை நிறடோயோட்டோகாரை 21 ஆண்டுகளுக்குப் பிறகு தோண்டி எடுத்துள்ளனர். தோண்டி எடுக்கப்பட்ட அந்த காரைசர்ப்ரைஸாககாபூலில் உள்ள தேசிய அருங்காட்சியக வளாகத்தில்வைக்கதாலிபான்கள் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.