Skip to main content

சீனாவில் 2020ல் இரட்டை நிலவு!

Published on 19/10/2018 | Edited on 23/10/2018
moon

 

 

சீனாவின் செங்டு என்ற நகருக்கு மட்டும் இனி இரண்டு நிலவுகள் வெளிச்சம் தரும். ஒன்று தேய்ந்து வளரும் இயற்கை நிலவு. மற்றொன்று இயற்கை நிலவைக் காட்டிலும் எட்டு மடங்கு வெளிச்சம் தரும் செயற்கை நிலவு.
 

இந்த நிலவு 80 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மட்டுமே வெளிச்சம் தரும். இயற்கை நிலவை உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் பார்க்க முடியும். ஆனால், இந்த செயற்கை நிலவை சீனா முழுமையும் பார்க்க முடியும். அதைத்தாண்டி கடல் கடந்தும் சில நாடுகளில் பார்க்க முடியும் என்கிறார்கள்.
 

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டுவில் உள்ள செங்டு ஏரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி மைக்ரோஎலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் கோ.லிமிடெட் தலைவரான வு சுன்ஃபெங் இந்த தகவலை தெரிவித்தார்.
 

இந்த செயற்கை நிலவு ஒளிதரத் தொடங்கினால் செங்டு நகரத் தெருவிளக்குகளுக்கு ஆகும் மின்சார செலவு மிச்சமாகும் என்கிறார்கள். அதேசமயம், இந்த நிலவின் உயரம், அளவு, வெளிச்சத்தின் அளவு ஆகியவை குறித்த விவரங்கள் சிறிதளவே தெரியவந்துள்ளன.
 

இதற்கிடையே, இந்தத் திட்டத்துக்கு செங்டு நகர நிர்வாகமோ, சீன அரசோ அனுமதி கொடுத்திருக்கிறதா என்பதும் தெரியவில்லை. இத்தகைய செயற்கை நிலவு திட்டம் 1990களில் ரஷ்யாவிலும் முயற்சி செய்யப்பட்டது. விண்வெளி கண்ணாடி என்ற பெயரில் மூன்றுமுதல் ஐந்து இயற்கை நிலவுகளின் வெளிச்சம் அளவுக்கு பெற திட்டமிட்டு ஒரு முயற்சி நடைபெற்றது. ஆனால், அந்த திட்டத்தின்படி 5 கிலோமீட்டர் பரப்பளவுக்குத்தான் வெளிச்சம் கிடைக்கும் என்று அப்போது கூறப்பட்டது. அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது. 
 

செயற்கை நிலவு உருவாக்கி இரவு நேரத்தில் தொடர்ந்து வெளிச்சம் தருவதால் வனவிலங்குகள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று இயற்கை ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இயற்கை நிலவின் தேய்ந்து வளரும் தன்மைக்கு தகுந்தபடி தங்கள் இரவுநேர வாழ்க்கையை அமைத்துக் கொண்ட ஆந்தைகள், ஒருவகை கழுகுகளின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படும். ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் என்ற கடல் உயிரினம் உள்பட நூற்றுக்கணக்கான பவளப் பாறை வகைகள் முட்டையிடும் பருவத்தில் மாறுதல் ஏற்படும் என்று அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கார்கே இது போன்ற விஷயங்களில் பொறுப்புடன் பேச வேண்டும்” - மத்திய அமைச்சர் விமர்சனம்

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
 Union Minister pralhad joshi says Kharge should speak responsibly on such matters

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கோருவதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஆறுகள், ஊர்கள், மலைகள் என 30 இடங்களுக்கு சீன பெயர்களை, சீன அரசு சூட்டி 4 ஆவது பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 30 ஆம் தேதி சீன குடிமை விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. 

அதன்படி அருணாச்சலப் பிரதேசத்தின் திபெத்திய தன்னாட்சி பகுதியில் உள்ள 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு ஏரி என 30 இடங்களுக்கு சீன எழுத்துகளிலும், திபெத்திய மொழிகளிலும் பெயர் சூட்டப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீன மொழி பெயர்கள் இடம் பெற்றுள்ள சம்பவம் உலக அளவில் அதிர்வலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2017, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, ராஜஸ்தான் மாநிலம், சித்தோர்கார் என்ற இடத்தில் கடந்த 4ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “பிரதமர் மோடி நாட்டை பற்றி சிந்திப்பதே இல்லை. சோனியா காந்தியின் குடும்பத்தை வசைபாடுவதிலே முழு கவனத்தை செலுத்தி வருகிறார். மோடி தன்னை ‘56’ அளவு மார்பு கொண்டவன், பயப்பட மாட்டேன் என்று கூறுகிறார். நீங்கள் பயப்படாவிட்டால், சீனாவுக்கு பெரும் நிலப்பரப்பை கொடுத்தது ஏன்?. சீன ராணுவம் இந்தியாவிற்குள் ஊடுருவிய போது பிரதமர் மோடி தூங்கிக் கொண்டிருந்தாரா? அல்லது அவர் தூக்க மாத்திரை போட்டிருந்தாரா?” என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 

இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று (05-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரைப் பற்றி நான் இத்தகைய மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை. மோடி தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின் பிரபலமான பிரதமராக இருப்பதால், கார்கே எந்த வகையான மொழியைப் பயன்படுத்துகிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கார்கே, மாபெரும் கட்சியின் தேசியத் தலைவர். 

இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அவர் இது போன்ற விஷயங்களில் பேசும்போது பொறுப்புடன் பேச வேண்டும். தான் என்ன பேசுகிறோம் என்று அவருக்கு தெரியவில்லை. சீனாவின் ஊடுருவல்களை நாங்கள் தடுத்துள்ளோம். 1962ஆம் ஆண்டில், 34,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனா கைப்பற்றியபோது அதை ஏன் காங்கிரஸ் தடுக்கவில்லை?. சீனாவை இந்திய எல்லைக்குள் நுழைய எங்கள் அரசு அனுமதிக்கவில்லை என்று முழு நம்பிக்கையுடன் கூறுகிறோம். ஒரு அங்குல நிலம் கூட யாராலும் அபகரிக்கப்படவில்லை” என்று கூறினார்.

Next Story

“பிரதமர் மோடி சீன எல்லை பிரச்சனை குறித்து எப்போது வாய்திறப்பார்?” - கனிமொழி எம்.பி. கேள்வி

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
"When will PM Modi open his mouth on China border issue?" - Kanimozhi MP question

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கோருவதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஆறுகள், ஊர்கள், மலைகள் என 30 இடங்களுக்கு சீன பெயர்களை, சீன அரசு சூட்டி 4 ஆவது பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 30 ஆம் தேதி சீன குடிமை விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி அருணாச்சலப் பிரதேசத்தின் திபெத்திய தன்னாட்சி பகுதியில் உள்ள 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு ஏரி என 30 இடங்களுக்கு சீன எழுத்துகளிலும், திபெத்திய மொழிகளிலும் பெயர் சூட்டப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீன மொழி பெயர்கள் இடம் பெற்றுள்ள சம்பவம் உலக அளவில் அதிர்வலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2017, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

"When will PM Modi open his mouth on China border issue?" - Kanimozhi MP question

இந்நிலையில் இது குறித்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும்,  திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “அருணாச்சல பிரதேசத்தின் பெயரை மாற்றும் அளவிற்கு நம் நாட்டிற்குள் சீனாவை ஊடுருவ, ஒன்றிய பா.ஜ.க. அரசு அனுமதித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. தங்களின் ஆதாயத்திற்காக, நாட்டின் பாதுகாப்பை அடைமானம் வைத்துவிட்டதா பா.ஜ.க.?. தமிழ்நாட்டில் வாக்குக்காக அவதூறுகளைப் பரப்பும் பிரதமர் மோடி, சீன எல்லை பிரச்சனை குறித்து எப்போது வாய்திறப்பார்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.