Skip to main content

சுந்தர் பிச்சையை பின்தொடர்ந்த மர்ம மனிதர்

Published on 13/12/2018 | Edited on 13/12/2018

 

sun

 

பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை சேமிப்பது, அரசியல் பாரபட்சமுடன் கூடிய தேடல் முடிவுகளை தருவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் கூகுள் நிறுவனம் மீது சுமத்தப்பட்டு அதற்கான விசாரணை நீதித்துறை குழு முன் நேற்று நடைபெற்றது. இதில் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் தகவல் திருட்டு, கூகுள் நிறுவனத்தின் அரசியல் நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து சுந்தர் பிச்சை பதிலளித்தார்.

அதில் சுந்தர் பிச்சை,"தனி நபர்களின் தகவல்கள் அவர்களது போனில் அமைக்கப்பட்டுள்ள செட்டிங்கை பொறுத்தே கூகுள் பெற முடியும், ஆனால் கிளவுட் மெமரி எனப்படும் இணையத்தில் சேமிக்கப்படும் தகவல்களை கூகுள் பார்க்க முடியும், ஆனால் கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு அவ்வாறு செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் கூகுள் நிறுவனம் அரசியல் சார்பற்றது, கூகுள் தேடலின் பொழுது வரும் முடிவுகள் கூகுள் நிறுவனத்தால் முடிவு செய்யப்படுபவை அல்ல எனவும் கூறினார்.

இந்த விசாரணை கூட்டத்தின் பொழுது ஒரு கண்ணில் மட்டும் கண்ணாடி அணிந்து, வெள்ளை மீசையுடன் ஒரு நபர் தொடர்ந்து சுந்தர் பிச்சையை பின்தொடர்ந்துவந்தார். அவர் யார் என்ற தேடலே தற்பொழுது கூகுளில் அதிகமாக உள்ளது. ஆன்லைன் தகவல்கள் திருடப்படுவதற்கு எதிரான ஒரு போராட்ட வகையே இது. மோனோபோலி மேன் (பிரத்தியேக உரிமைக்கான மனிதர்)என அழைக்கப்படும் இந்த வேடமணிந்தபடி தகவல் திருட்டு தொடர்பான வழக்குகளை சந்திப்பவர்களுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதே இதன் நோக்கம். இந்த வகையில் மோனோபோலி மேன் வகை போராட்டங்கள் ஏற்கனவே இதுபோன்ற தகவல் திருட்டு தொடர்பான வழக்குகள் நடக்கும்போதும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .