தெற்காசியாவில் உள்ள போர்னிகோ காடுகள் உலகப்புகழ் பெற்றவை. மான்கள், குரங்குகள் முதலிய உயிரினங்கள் அங்கும் அதிகம் காணப்படுகின்றன. இந்நிலையில் வன ஊழியர் ஒருவர் அங்குள்ள ஆற்றில் இறங்கி பாம்புகளை தேடியுள்ளார். அப்போது அங்கு வந்த ஓராங்குட்டன் குரங்கு ஒன்று அவர் தண்ணீரில் விழுந்து தத்தளிப்பதாக நினைத்து அவருக்கு கைகொடுத்துள்ளது.

Advertisment

Advertisment

இந்த நிகழ்ச்சியை வன ஊழியருடன் சென்ற ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மனித தன்மையில் குரங்குகள் மனிதனை மிஞ்சிவிடுவதாக நெட்டிசன்கள் அந்த குரங்கை பாராட்டி வருகிறார்கள்.