Skip to main content

மென்பொருளை இன்ஸ்டால் செய்து போலி செய்தியை தடுத்த மால்டோவா...!

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

ஐரோப்பாவில் இருக்கும் மால்டோவா எனும் நாடு, ஐரோப்பவில் உள்ள நாடுகளிலேயே மிகவும் ஏழ்மையான, ஊழலான நாடாக கருத்தப்படுகிறது. ஆனால், ஃபேஸ்புக் வெளிட்ட்டுள்ள பொய்யான செய்திகளும் தகவல்களும் நிறைந்துள்ள பகுதிகள் எனும் பட்டியலில் இந்த நாடு இடம்பெறவில்லை.

 

fb

 

ஃபேஸ்புக் வெளியிட்டுள்ள பொய்யான செய்திகளும் தகவல்களும் நிறைந்துள்ள பகுதிகள் எனும் பட்டியலில் ஏன் இந்த நாடு இடம்பெறவில்லை என்பதை அந்நாட்டில் இருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் விளக்கியுள்ளனர். ஃபேஸ்புக்கில் பரப்பப்படும் பொய்யான மற்றும் போலியான செய்திகளையும் அதனை பதிவு செய்பவர்களையும் கண்டறிய அவர்கள், பிரவுசரில் ட்ரால்லெஸ் என்ற மென்பொருளை இன்ஸ்டால் செய்துள்ளனர்.
 

பின் அதன் மூலமாக போலியான கணக்குகளைப் பற்றிய ஒரு தரவை தயார் செய்துள்ளனர். அதன் பின் அவர்கள் சேகரித்த தரவுகளை ஃபேஸ்புக்கின் புகார் தெரிவிப்பதற்கான வசதியை பயன்படுத்தி அவர்கள் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு அவதூறு பரப்பும் 168 போலி கணக்குகள், 26 பக்கங்கள் மற்றும் 8 இன்ஸ்டாகிராம் கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நீக்கியுள்ளது. 
 

பொய் செய்திகள் பற்றி ஃபேஸ்புக் நிறுவனத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல இவர்களுக்கு 3 வருடங்கள் ஆகியுள்ளது. அதன் பிறகே பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முகநூலில் அறிமுகமாகி, பெண் குரலில் பேசி வழிப்பறி... நால்வர் கைது!

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

chennai

 

முகநூலில் அறிமுகமாகி, பெண் குரலில் பேசி தனியே அழைத்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

மாதவரத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் சில நாட்களுக்கு முன்பு மாதவரம் போலீசாரிடம் புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அந்தப் புகாரில், ரெட்டேரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை வழிமறித்து தாக்கி தன்னிடம் இருந்த பிரேஸ்லெட், செல்ஃபோன் ஆகியவற்றை வழிப்பறி செய்ததாக கூறியிருந்தார். இதேபோல் அந்தப் பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் குறித்த புகார்கள் அதிகமானதை அடுத்து போலீசார் அந்தப் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 

chennai

 

அப்போது போலீசாரை கண்டவுடன் தப்ப முயன்ற நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விரட்டிப் பிடித்து விசாரணை செய்ததில், நான்கு பேரும் முகநூலில் பழகி, பெண் குரலில் பேசி தனியே வரவழைத்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட விஜயகுமார், மோனிஷ், டனிஷ், தமிழ் ஆகிய நான்கு பேரிடமும் இருந்து திருட பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள், செல்ஃபோன்கள் மற்றும் திருடப்பட்ட நகைகள் ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் ஐயப்பனிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் இந்தக் கும்பல்தான் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

Next Story

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் வேலை செய்யவில்லையா...?

Published on 14/03/2019 | Edited on 14/03/2019

ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதள கணக்குகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் பல இடங்களில் நேற்று திடீரென முடங்கின.

 

fb

 

அதனை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் அளிக்க துவங்கிய நிலையில் அந்நிறுவனங்கள் அதன் தொழில்நுட்ப துறை வல்லுநர்களை வைத்து உடனடியாக தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்துவிட்டதாகவும், தொழில்நுட்ப கோளாறுகளுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், உலகளவில் இன்னமும் சில பயனாளர்களுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் பிரச்னைகள் ஏற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
 

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள Down Detector, இங்கிலாந்து, டெக்சாஸ், சீட்டல், வாஷிங்டன், லத்தின் அமெரிக்காவின் சில பகுதிகள், பெரு, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட இடங்களிலும் பயனர்களுக்கு சமூக வலைதள கணக்குகள் முடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.

 

மேற்குறிப்பிட அந்த இடங்களில் எல்லாம் வாடிக்கையாளர்கள் அவர்களின் கணக்கை லாக் அவுட் செய்யவில்லை என்றால் தொடர்ந்து பயன்படுத்த முடிவதாகவும், அதேசமயம் அவர்களின் கணக்கு ஒருமுறை லாக் அவுட் செய்துவிட்டு மீண்டும் முயன்றால் அவர்களால் லாக் இன் செய்ய முடியவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

 

இந்த பிரச்னையை சரி செய்ய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்களின் தொழில்நுட்ப குழு பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. விரைவில் உலகம் முழுவதும் இந்த தொழில் நுட்பக் கோளாறு சீராகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.