Skip to main content

"கறுப்புக் குடையும்...சிவப்பு கம்பளமும்...மோடியின் கொழும்பு விசிட்!"

Published on 09/06/2019 | Edited on 09/06/2019

தமிழக மீனவர்களுக்கு இலங்கை பகையாளி என்றாலும், பிரதமர் மோடிக்கு எப்போதுமே பங்காளி தான். பிரதமராக 2-வது முறை பதவியேற்ற பின்னர், முதல் வெளிநாட்டுப் பயணமாக நேற்று மாலத்தீவு சென்ற நரேந்திரமோடி, அங்கிருந்து நேராக இன்று (09-06-2016) காலை 11-00 மணிக்கு கொழும்பு சென்றடைந்தார். அவரை, கொழும்பு பண்டாரநாயக சர்வதேச விமானநிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வரவேற்றார். அவருக்கு அப்போது சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.

 

modi srilanga visit ...



அங்கிருந்து நேராக அதிபர் மாளிகைக்கு செல்லும் வழியில், ஏப்.21-ந்தேதி வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளான கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை நரேந்திரமோடி பார்வையிட்டதுடன், அங்கு குண்டு வெடிப்பின்போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியின்போது, அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை ரஞ்சித் ஆண்டகையிடம் தனது கவலையையும் மோடி தெரிவித்தார்.

 



பின்னர் அங்கிருந்து அதிபர் மாளிகைக்குள் பிரதமர் மோடியின் கார் நுழைந்தபோது, மழை பெய்யத் தொடங்கியது. வரவேற்க காத்திருந்த இலங்கை அதிபர் சிறிசேன, மோடிக்கு கறுப்பு குடை பிடித்து மாளிகைக்கு அழைத்து செல்லும் சேவகனாக மாறினார்.

 

modi srilanga visit ...



குடைபிடித்து செல்லும் புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மைத்ரி பால சிறிசேன "இலங்கைக்கு வருகை தந்தமைக்கு நன்றி. நீங்கள் (நரேந்திரமோடி)எங்களுடைய உண்மையான நண்பன் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். உங்களுடைய ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை நான் மிகவும் பாராட்டுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

 

modi srilanga visit ...



"தீவிரவாத அச்சுறுத்தலை முறியடிக்க உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும். தீவிரவாதம் என்பது கூட்டு அச்சுறுத்தல் எனவே, ஒற்றுமையுடனும், ஒருமைப்பாட்டுடனும் அவற்றிற்கு எதிராக செயல்படவேண்டும்" என மாலத்தீவு நாடாளுமன்றத்தில் உரையாற்றியதையே, இலங்கை அதிபரிடம் எடுத்துக்கூறிய மோடி, பின்னர் கொழும்புவில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியாவுக்கு புறப்பட்டார்.

 

modi srilanga visit ...



இலங்கையில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படலாம் என ஏப்.04-ந்தேதியே இந்திய உளவுத்துறை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், இதுபற்றி தமது கவனத்திற்கு கொண்டு வரவில்லை என அதிபர் மைத்ரிபால சிறிசேன ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால், இலங்கையின் தேசிய உளவுத்துறை தலைவர் சிசிரா மெண்டிஸ் உளவுத்துறை எச்சரிக்கை குறித்து அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என கூறியிருந்தார். 

 



இதனை அதிபர் மறுத்து வந்த நிலையில்,  நேற்றிரவு சிசிரா மெண்டிஸ் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதாவது, நட்பு நாட்டின் பிரதமர் மோடி இலங்கைக்கு வந்தபோது, உளவுத்துறையின் எச்சரிக்கையை கோட்டை விட்டதற்கு பரிகாரம் தேடியிருக்கிறார் சிறிசேன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.