Skip to main content

'மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும்‘மென்டூ’இயக்கம்

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

அண்மையில் MEE TOO இயக்கம் பிரபலமாகி ஆண்களுக்கு எதிராக பெண்கள் பாலியல் புகார்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், ஆண்கள் தங்களுக்கு நிகழும் பாலியல் தொல்லைகளை புகார்களாக தெரிவிக்க இந்தி நடிகர் கரண் ஓபராயின் நண்பர்கள் MEN TOO என்ற புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளனர். 

 

men too

 

MEE TOO மூலம் பெண்கள் தங்களுக்கு நிகழும் பாலியல் தொல்லைகளை தைரியமாக வெளி உலகில் சொல்ல வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், இதைப்பயன்படுத்தி பல பெண்கள், ஆண்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். 
 

எனவே பாதிக்கப்படும் ஆண்களுக்கு ஆதரவாக MEN TOO என்ற புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் பொய்யான குற்றச்சாட்டு சுமத்தும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்தியாவில் தற்கொலை செய்து கொள்ளும் ஆண்களில் 51% பேர் பொய்யான பாலியல் புகார்களால் மன உளச்சலுக்கு ஆளானவர்கள் எனவும் கூறுகிறது.

 
பாலியல் புகாருக்கு ஆளாகும் ஆண்களின் பெயர் இறுதி தீர்ப்பு வரும்வரை வெளியிடக் கூடாது எனவும் வலியுறுத்துகிறது men too.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாடகி சுசித்ராவின் நிலை என்ன?

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

பிரபல திரைப்பட பாடகி சுசித்ரா,  ’யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட படங்களில் நடித்த கார்த்திக்கை திருமணம் செய்துகொண்டார்.  திரைப்படங்கள், விழாக்கள் என்று பரபரப்பாக இருந்தார் சுசித்ரா. கடந்த 2017ம் ஆண்டில் திடீரென சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் இருந்து,  ’சுச்சி லீக்ஸ்’ என்ற பெயரில் தனுஷ், விஜய் டிவி டிடி, ஹன்சிகா, த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, சின்மயி, ராணா, ஸ்ருதிஹாசன், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரின் அந்தரங்க வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியானதால் திரையுலகம் அதிர்ந்தது. இதையடுத்து, தனது டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து, அதிலிருந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்கள்’’ என்று சுசித்ராவே சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

’இது ஹேக்கர்களின் வேலை அல்ல, சுசித்ராவேதான் வெளியிட்டுள்ளார், அவருக்கு மனநிலை சரியில்லை’ என்றும் அப்போது தகவல் பரவியது.  இந்த விவகாரம் தொடர்ந்த நிலையில்,  இதை யாரும் பெரிதுபடுத்தவேண்டாம் என்று சுசியின் கணவர் கார்த்திக் வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் இந்த விவகாரம் தொடர்ந்த நிலையில், சுசித்ராவிடம் இருந்து கார்த்திக் விவாகரத்து பெற்றார்.  

 

s

 

விவாகரத்திற்கு பின்னர் தனது குடும்பத்தினரை விட்டு விலகி, அடையாறில் உள்ள வீட்டில் சுசித்ரா தனியாக வாழ்ந்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர் காணாமல் போய்விட்டதாக, அவரது தங்கை சுஜிதா, அடையாறு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சுசித்ராவை தேடி வந்த போலீசார், சென்னை தி.நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இருந்து சுசித்ராவை மீட்டனர்.  மீட்பின்போது, ‘’என்னை மனநலம் பாதிக்கப்பட்டவள் போல் குடும்பத்தினர் நடத்துகிறார்கள். அதனால்தான் வீட்டினருடம் இருந்து விலகி தனியாக வாழ்ந்தேன். இப்போது அங்கேயும் இருக்கப் பிடிக்காததால்தான் ஓட்டலில் தங்கியிருந்தேன்’’ என்று கூறியதாக ஒரு தகவல் வந்தது. காவல்துறையினர் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

‘போக்கிரி’ போன்ற படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவரும் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ரேடியோ ஜாக்கியும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான சுசித்திராவின் நிலை என்ன என்று அவரின் ரசிகர்கள் கவலையுற்றிருக்கின்றனர்.

 

IIT

 

 

Next Story

ஆபாசமாக மெசேஜ் செய்த நபரால் அதிர்ச்சியில் பாடகி சின்மயி!

Published on 11/06/2019 | Edited on 11/06/2019

பாடகி சின்மயிக்கு சமூக வலைத்தளம் மூலம் ஆபாசமாக மெசேஜ் செய்த நபரால் கடும் அதிர்ச்சியாகி உள்ளார்.இதற்கு முன்பு மீ டூ மூலம் தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு பற்றி வெளிப்படையாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.இந்த நிலையில் சமூக வலைத்தளம் மூலம் தனக்கு வந்த ஆபாச மெசேஜ்களை பதிவிட்டுள்ளார்.மேலும் அந்த நபர் பேசியுள்ளதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளார். 


 

சின்மயியிடம் மோசமான ஆபாச வார்த்தைகளால் முகம் சுளிக்கும் வகையில் பேசியுள்ள அந்த நபரை பலரும் ட்விட்டரில் திட்டி தீர்த்து வருகின்றனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் பாடகி சின்மயிக்கு தனிப்பட்ட முறையில் மேசேஜ்களை அனுப்புகின்றனர். அதனை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.