Skip to main content

உடைந்த கப்பலிலிருந்து டன் கணக்கில் வெளியேறும் எண்ணெய்... கருமையான கடல்...

Published on 10/08/2020 | Edited on 10/08/2020

 

mauritius oil spill updates

 

மொரிஷியஸ் தீவைச் சுற்றியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் உடைந்த கப்பலிலிருந்து வெளியேறும் எண்ணெய் காரணமாக கடல் பகுதி முழுவதும் கடுமையாக மாசடைந்து வருகிறது. 

 

ஜூலை மாத இறுதியில் மொரிஷியஸ் தீவின் கிழக்கு கரையில் உள்ள பாயிண்ட் டி எஸ்னிக்கு கப்பல் ஒன்று வந்துள்ளது. எம்.வி வகாஷியோ என்ற அந்த கப்பல் சுமார் 4000 டன் எரிபொருளுடன் மொரிஷியஸ் அருகே பவளப்பாறைகள் நிறைந்த பகுதியைக் கடக்கும்போது, விபத்துக்குள்ளானது. இதில் கப்பல் கடுமையாக சேதமடைந்து, அதிலிருந்த எரிபொருள் கடலில் கசிந்து வருகிறது. இதன்காரணமாக அப்பகுதியில் கடல் முழுவதும் எண்ணெய் படர்ந்து கருமையாக மாறியுள்ள நிலையில்,

 

இதனைச் சுத்தப்படுத்த அந்நாடு கடுமையாக போராடி வரும் நிலையில், மொரிஷியஸ் பிரதமர் பிரசாந்த் ஜுக்னாத் ஆகஸ்ட் 7 அன்று சுற்றுச்சூழல் அவசர நிலையை அறிவித்துள்ளார். இந்த சூழலில், கடற்கரை நோக்கி படையெடுத்துள்ள பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் இந்த எண்ணெய்யை நீக்குவதற்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். பவளப்பாறைகள், ஏராளமான கடல் உயிரினங்களைக் கொண்ட இப்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த எண்ணெய் கசிவு சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை - மொரீஷியஸ் இடையே நேரடி விமான சேவை 

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

Direct flight between Chennai and Mauritius

 

சென்னை - மொரீஷியஸ் இடையே நேரடி விமான சேவை துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் சென்னை - மொரீஷியஸ் இடையே நேரடி விமான சேவை துவங்கப்பட உள்ளது. மொரீஷியஸில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும், சென்னையில் இருந்து சனிக்கிழமை தோறும் விமான சேவை இயக்கப்பட உள்ளது. சென்னை - மொரீஷியஸ் இடையேயான வாராந்திர விமான சேவையை ஏர் மொரீஷியஸ் நிறுவனம் இயக்க உள்ளது. இந்த நேரடி விமான சேவைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

 

 

Next Story

மொரீசியஸில் அழகி போட்டி - கோவையை சேர்ந்த பெண் பட்டம் வென்றார்

Published on 21/10/2019 | Edited on 21/10/2019
Beauty contest in Mauritius




மொரீசியஸ் நாட்டில் நடைபெற்ற திருமணமான பெண்களுக்கான அழகி போட்டியில் பங்கேற்று கோவையை சேர்ந்த சோனாலி பிரதீப் என்ற பெண் மிசஸ் இந்தியா யுனிவர்ஸ் எர்த் என்ற பட்டத்தை வென்றார். பட்டம் வென்ற அவர், கோவை விமானம் மூலம் இன்று கோவைக்கு வந்தார்.