பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கம் கடந்த 14 ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடத்திய தாக்குதலில் 40 இந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். அதனை தொடர்ந்து புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக பால்கோட் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அதனை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் எல்லை பகுதியில் பதட்டம் நிலவியது. தமிழகத்தை சேர்ந்த இந்திய வான்படை பைலட் அபிநந்தன் பாகிஸ்தானில் ராணுவத்தால் பிடிக்கப்பட்டு, பின்னர் இன்று அவரை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் சார்பாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் பாகிஸ்தானில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இன்று காலை இது பற்றி பேசிய அந்நாட்டு அமைச்சர் குரேஷி, "மசூத் அசார் பாகிஸ்தானில் தான் உள்ளான். உடல்நிலை சரி இல்லாமல் இருக்கும் மசூத் அஸாருக்கு எதிராக வலுவான ஆதாரங்களை இந்தியா வழங்கினால் நாங்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்" என கூறியுள்ளார்.
Show comments