Skip to main content

ஒன்று சேர்ந்த பெருநிறுவனங்கள்... 54,000 கோடியை இழந்த மார்க்...

Published on 29/06/2020 | Edited on 29/06/2020

 

mark zuckerberg loss 7 billion

 

ஹிந்துஸ்தான் யூனிலீவர், கோகோ கோலா, ஸ்டார்பக்ஸ் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் ஃபேஸ்புக் தளத்தில் கொடுத்துவந்த விளம்பரங்களை குறைத்த நிலையில், இதன் காரணமாக சுமார் 54,000 கோடி ரூபாய் அளவு தனது சொத்துமதிப்பை இழந்துள்ளார் மார்க் சக்கர்பெர்க்.

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட போராட்டங்கள், அமெரிக்காவின் பல இடங்களில் கலவரங்களாக மாறியது. இந்த சூழலில், போராட்டக்காரர்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்தார். போராட்டம் என்ற பெயரில் கறுப்பின மக்கள் கடைகளை சூறையாடினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் எனப் பொருள்படும் அந்த ட்வீட் வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக்கூறி தனது தளத்திலிருந்து நீக்கியது ட்விட்டர். ஆனால் பேஸ்புக் நிறுவனமோ, ட்ரம்ப்பின் அந்த பதிவை நீக்கவில்லை.

மேலும், இதுகுறித்து பேசிய ஃபேஸ்புக் நிறுவனர் மார்க், "ஆலோசனைக் கூறுபவர்களையும் நாங்கள் மதிக்கிறோம். அனைவரின் ஆலோசனைகளையும் நாங்கள் மதிக்கிறோம். உள்ளடக்கக் கொள்கைகள் குறித்து எங்கள் குழுவுடன் ஆலோசித்து வருகிறோம்" எனத் தெரிவித்தார். ஆனால், ட்ரம்ப்பின் பதிவை நீக்காத மார்க்கின் செயல் பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்திய நிலையில், கறுப்பினத்தவர்களுக்கு  எதிரான பல பதிவுகள் மற்றும் விளம்பரங்களும் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், இதனைக் காரணமாகக்காட்டி கோகோ கோலா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஸ்டார்பக்ஸ், ஹோண்டா, வெரிசோன், ஹெர்ஷே கோ போன்ற உலகின் பல முன்னணி நிறுவனங்கள், ஃபேஸ்புக்கில் விளம்பரம் தருவதை நிறுத்தின. இதன் விளைவாக பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை 8.3% அளவுக்குச் சரிந்தன. இந்த கடும் சரிவின் காரணமாக மார்க்கின் சொத்து மதிப்பில் சுமார் 54,000 கோடி ரூபாய் அளவுக்குச் சரிவு ஏற்பட்டது. மேலும், ஒரே நாளில், உலகின் மூன்றாவது பணக்காரர் என்ற இடத்திலிருந்து நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டார் மார்க்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்; ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கோடி இழப்பா? 

Published on 06/03/2024 | Edited on 07/03/2024
Too much loss per hour for Block Facebook, Instagram

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, மார்க் ஜுக்கர்பெர்க் என்பவர் தொடங்கிய நிறுவனம் ஃபேஸ்புக். உலகம் முழுவதும் உள்ள இணைய பயனர்களுக்கு தங்களது கருத்துகள் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் முன்னிலையில் உள்ளது. தற்போது, மார்க் ஜுக்கர்பெக் மெட்டா எனும் நிறுவனத்தைத் தொடங்கி அதன் கீழ் ஃபேஸ்புக் மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறார்.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள், திடீரென்று உலகம் முழுவதும் நேற்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்தனர். இதனையடுத்து, தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன. 

இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் 1 மணி நேரம் முடங்கியதால் அமெரிக்க பங்குச் சந்தையில் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் 23,127 கோடி இழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் நேற்று (05-03-24) வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலில், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் இருந்தார். இதற்கிடையே, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று 1 மணி நேரம் முடங்கியதால், மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் $2.79 பில்லியன் டாலர் குறைந்து தற்போது $176 பில்லியனாக உள்ளது. இருப்பினும், உலகின் நான்காவது பணக்காரர் என்ற நிலையை மார்க் ஜுக்கர்பெர்க் தக்க வைத்துள்ளார். 

Next Story

பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம்!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Facebook, Instagram shocked the users

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள் முடங்கியுள்ளன.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் இன்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், தற்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயல்படத் தொடங்கியது.