Skip to main content

நிலவில் காலடி வைத்த சாதனைப் பயணத்தில் பங்கெடுத்த மைக்கேல் கொலின்ஸ் காலமானார்!

Published on 29/04/2021 | Edited on 29/04/2021

 

On a journey of adventure set foot on the moon Participant Michael Collins passed away

 

நிலவில் முதன்முதலில் காலடி வைத்தவர்கள் யாரென்று கேள்வி எழுப்பினால், அனைவரும் உச்சரிக்கும் பெயர்கள், ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் என்பதாகவே இருக்கும். 1969ஆம் ஆண்டு, ஜூலை 20ஆம் தேதி, அப்பல்லோ 11 விண்கலத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொண்டு, நிலவில் காலடி வைத்த சாதனையைச் செய்த இவர்கள் இருவரோடு இணைந்து சென்ற மற்றொரு விண்வெளி வீரர் மைக்கேல் கொலின்ஸ். இவர் இன்று (29.04.2021) தனது 90வது வயதில் வயது மூப்பு மற்றும் புற்றுநோய் காரணமாக காலமானார்.

 

1960களில் நிலவில் இறங்குவதற்கான முயற்சியில், அமெரிக்கா, ரஷ்யா இடையே பலத்த போட்டி நிலவியது. அந்தச் சூழலில், நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி அமெரிக்கா மகத்தான உலக சாதனையைப் படைத்தது. இந்த சாதனையைப் படைப்பதற்காக, சுமார் 2,38,000 மைல்கள் பயணித்து நிலவுக்குச் சென்ற மூவரில், ஆம்ஸ்ட்ராங்கும் ஆல்ட்ரினும் மட்டும் நிலவில் இறங்கி, 21 மணி நேரத்தை அங்கே செலவிட்டனர். பின்னர் அங்கிருந்து 21.5 கிலோ மதிப்புள்ள பொருட்களை சோதனை செய்வதற்காக சேகரித்துவிட்டு தங்கள் விண்கலத்துக்குத் திரும்பினார்கள். 

 

On a journey of adventure set foot on the moon Participant Michael Collins passed away

 

நிலவில் காலடி வைத்த சாதனை நிகழ்த்தப்பட்டபோது, மூன்றாவது விண்வெளி வீரரான மைக்கேல் கொலின்ஸ், அப்பல்லோ விண்கலத்தில், நிலவுக்கு 69 மைல்கள் தொலைவில், சுற்றுவட்டப்பாதையிலிருந்தபடி விண்கலத்தின் செயல்பாட்டைக் கண்காணித்தார். பின்னர், தங்கள் 8 நாள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, மூவரும் பூமிக்குத் திரும்பினார்கள். பூமிக்குத் திரும்பிய பின்னர், 21 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டார்கள். நிலவிலிருந்து ஏதேனும் தொற்றுநோயைச் சுமந்துவந்து பூமியில் பரப்பிடக்கூடாதென்ற காரணத்தால் தனிமைப்படுத்திக்கொண்டனர். இவர்களுக்குப் பின், இதுவரை வேறு எவரும் நிலவில் காலடி வைக்கவில்லை. நிலவுக்குச் சென்ற சாதனைப் பயணத்தைத் தொலைக்காட்சி மூலம் உலகெங்கும் ஒளிபரப்பினார்கள். பல லட்சக்கணக்கான மக்கள் ஆச்சர்யத்துடனும், உணர்ச்சிப் பெருக்குடனும் கண்டுகளித்தனர். ஆனால் தொலைக்காட்சித் திரையில் மைக்கேல் கொலின்ஸ் தெரிவதற்கான வாய்ப்பு அமையவில்லை. நிலவுக்குச் சென்ற மூவரில் ஒருவரான நீல் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2012ஆம் ஆண்டு காலமானார். 

On a journey of adventure set foot on the moon Participant Michael Collins passed away

 

மைக்கேல் கொலின்ஸ், தனது சாதனைப் பயணத்திற்குப் பிறகு, வாஷிங்டனிலுள்ள நேஷனல் ஏர் & ஸ்பேஸ் மியூசியத்தில் பணியாற்றினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்த மைக்கேல் கொலின்ஸ், தன் வாழ்நாளின் இறுதி நாட்களை, அமைதியாகவும் குடும்பத்தினருடனும் செலவழித்தார். தன் வாழ்நாள் முழுக்க, மனமகிழ்ச்சியோடும் மனிதநேயத்தோடும் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டதாகவும், அதேபோல புற்றுநோயையும் எதிர்கொண்டு வாழ்ந்து மறைந்துள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். விண்வெளியில் அமெரிக்கா நிகழ்த்தியுள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாதனைக் கதைகளை எழுதுவதற்கு கொலின்ஸ் உதவியுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புகழாரம் சூட்டியுள்ளார். நிலவிருக்கும் காலம்வரை மைக்கேல் கொலின்ஸின் சாதனை பேசப்படும்!

 

- தெ.சு.கவுதமன்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிலவில் வெற்றிகரமாக கால் பதித்த ஜப்பான் விண்கலம்!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Japanese spaceship successfully set foot on the moon

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இதன் மூலம் உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு பிறகு நிலவில் கால் பதித்த நான்காவது நாடாக இந்தியா மாறியிருந்தது.

அதிலும் குறிப்பாக, நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும் உலகின் முதல் நாடாக இந்தியா தன் சாதனையைப் பதிவு செய்தது. இதனையடுத்து நிலவை ஆய்வு செய்ய ஜப்பான் விண்கலமான‘ஸ்சிலிம்’ விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் நிலவில் வெற்றிகரமாக ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் தரையிறங்கியதாக ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்‌ஷா (JAXA) தெரிவித்துள்ளது.

இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக நிலவில் கால் பதித்த 5 வது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது. ஏற்கெனவே 3 முறை இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஊக்கத்தொகையை பகிர்ந்தளித்த விஞ்ஞானி வீரமுத்துவேல்

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

Scientist veeramuthuvel who distributed the incentive

 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சாதனை திட்டங்களுக்கு முக்கிய பங்காற்றிய தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்குத் தமிழக அரசு சார்பில், ‘ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்’ என்ற தலைப்பில் பாராட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி (02.10.2023) நடைபெற்றது. இந்த விழாவிற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி உரையாற்றினார்.

 

இந்த விழாவில் தமிழக விஞ்ஞானிகளான கே. சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வி. நாராயணன், ஏ. இராஜராஜன், எம். சங்கரன், ஜெ. ஆசிர் பாக்கியராஜ், மு. வனிதா, நிகார் ஷாஜி மற்றும் ப. வீரமுத்துவேல் ஆகிய 9 பேருக்கும் தமிழக அரசு சார்பில் தலா 25 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கி பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.

 

இந்நிலையில் சந்திரயான் 3 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை தான் படித்த 4 கல்லூரிகளுக்குப் பிரித்து வழங்கினார். அதன்படி தான் படித்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி, தனியார் பொறியியல் கல்லூரி, திருச்சி என்ஐடி, சென்னை ஐஐடி என 4 கல்வி நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகையை சமமாக பிரித்து வழங்கினார்.