Skip to main content

இரட்டை குழந்தை பெற்றெடுத்த பெண்... அதிர்ச்சியில் உறைந்த கணவர்!

Published on 15/05/2020 | Edited on 15/05/2020
f



சீன நாடு மற்ற எல்லா நாடுகளை காட்டிலும் சற்று வித்தியாசத்தை கடைபிடிப்பது வாடிக்கை. உணவு பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட சிலவற்றில் மற்ற நாடுகளை காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட உணவை அவர்கள் உட்கொள்வார்கள். குழந்தை பிறப்பை பதவி செய்ய டிஎன்ஏ பரிசோதனை செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் இன்று ஒரு பெண் இரட்டை குழந்தை பெற்றெடுத்துள்ளார். இதனால் அவரின் கணவர் உள்ளிட்ட உறவினர்கள் மகிழ்ச்சியில் இருந்துள்ளனர்.


ஆனால் அந்த மகிழ்ச்சி சில மணி நேரங்கள்கூட நிலைக்கவில்லை. பிறந்த குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்வதற்காக அந்த குழந்தைகளின் டிஎன்ஏ-வை மருத்துவர்கள் சோதனை செய்துள்ளார்கள். அதில் ஒரு குழந்தையின் டிஎன்ஏ-வும் அந்த பெண்ணுடைய கணவரின் டிஎன்ஏவும் ஒத்து போய் உள்ளது. ஆனால் மற்றொரு குழந்தையின் டிஎன்ஏ தந்தையின் டிஎன்ஏவில் இருந்து முழுவதும் மாறுபட்ட இருந்துள்ளது. இதனால் அந்த குழந்தையின் தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையின் அம்மாவுக்கு வேறு ஒரு பழக்கம் மூலம் மற்றொரு குழந்தை பிறந்ததே இந்த குழப்பத்திற்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்நாட்டில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் மரணம்; கொரோனாவால் முடங்கிய சீனா

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

9 thousand people passed away per day; China paralyzed by Corona

 

சீனாவில் கொரோனா பரவலைத் தடுக்க அந்நாடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பி.எஃப்.7 வகை தொற்று அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

 

பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர்.

 

அதே சமயம் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. சீனாவில் நாள்தோறும் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் சடலங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா தொற்று அச்சத்தினால் இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்கு உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். 

 

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

 

 

Next Story

சோனியா காந்திக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

Sonia Gandhi is infected with Corona for the second time!

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு இரண்டாவது முறையாக, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

 

இது தொடர்பாக, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரசின் நெறிமுறைகளின் படி, சோனியா காந்தி தனிமைப்படுத்துதலில் உள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

கடந்த மூன்று மாதங்களில் அவர் இரண்டாவது முறையாக, கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து கவலைத் தெரிவித்திருக்கும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

 

அவரது உடல் ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்வுக்கும் பிரார்த்திப்பதாக கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

ஏற்கனவே, பிரியங்கா காந்திக்கு மீண்டும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட நிலையில், சோனியா காந்திக்கும் மீண்டும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.