அமெரிக்காவின் ஜார்ஜியா பகுதியில் ஒரு கடையில் திருடன் புகுந்துவிட்டதாக அந்நகர போலிசாருக்கு ஒரு தொலைப்பேசி வந்துள்ளது. அதனால் அதிர்ச்சி அடைந்த காவலர்கள்,விரைந்து அந்த கடைக்கு வந்தனர். அப்போது திருடர்கள் இருவர் அந்த கடையில் இருந்து வெளியே ஓடியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இருவரையும் துரத்திக்கொண்டு ஓடியுள்ளனர். திருடர்களும் அவர்கள் கையில் சிக்காமல் ஓடியுள்ளார்கள்.
அப்போது அந்த கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டு சக்கர வண்டியில் தள்ளிக்கொண்டு சென்ற இளைஞர் ஒருவர் திருடர்களை காவலர்கள் துரத்துவதை பார்த்துள்ளார். உடனடியாக சுதாரித்த அவர் தனது வண்டியை திருடர்கள் மீது தள்ளிவிட்டுள்ளார். திருடர்களும் அதிர்ச்சியில் கீழே விழுந்துள்ளார்கள். உடனடியாக காவலர்கள் அவர்களை கைது செய்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
திருடர்களை சிக்க வைத்த இளைஞர்... வைரலாகும் வீடியோ!
சார்ந்த செய்திகள்
Next Story
தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ
அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
Next Story
கார் ஓட்டுநரை தாக்கிய லாரி ஓட்டுநர்; கதறி அழுத மனைவி
சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள ரேடியல் சாலையில் கார் ஒன்றின் மீது லாரி மோதிய சம்பவத்தில் கார் ஓட்டுநருக்கும் லாரி ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், லாரி ஓட்டுநர் கார் ஓட்டுநரை அவருடைய மனைவி முன்பே தாக்கிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரேடியல் சாலையில் லாரி மோதியதில் கார் சேதமடைந்தது. இதனால் கார் ஓட்டுநர் லாரி ஓட்டுநரிடம் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்பொழுது லாரி ஓட்டுநர் அலட்சியமாக பதில் சொன்னதாலும், ஆபாசமாக பேசியதாலும் லாரியின் சாவியை கார் ஓட்டுநர் எடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காரில் வந்த நபரின் மனைவி முன்பே லாரி ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. காரில் வந்த நபரின் மனைவி கதறி அழுது கூச்சலிட்ட நிலையிலும் அவர் மீது தாக்குதல் தொடர்ந்தது. இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பல்லாவரம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.