உலகளவில் இலக்கியத்திற்கான உயரிய விருதான மேன் புக்கர், பெண் எழுத்தாளரான அன்னா பர்ன்ஸ்க்கு (46) வழங்கப்பட்டுள்ளது. இவர் வட அயர்லாந்தைச் சேர்ந்தவர். மேன் புக்கர் என்னும் இந்த உயரிய விருது 1969ஆம் ஆண்டு முதல் இலக்கிய எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அன்னா எழுதிய மில்க்மேன் என்னும் நாவலுக்காக இந்த வருடத்தின் மேன் புக்கர் விருது வழங்கப்பட்டுள்ளதாக விருது வழங்கும் மேன் க்ரூப் அறிவித்தது. மேலும் இந்த விருதுடன் ரூ.58.85 லட்சம் காசோலையும் வழங்கப்பட்டது.
மேன் புக்கர் விருது வாங்கிய அன்னா!!!
சார்ந்த செய்திகள்
Next Story
இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!
2023 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2023 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, ஆராய்ச்சியாளர்கள் கேட்டலின் கரிக்கோ, ட்ரூ வெய்ஸ்மன் ஆகிய 2 பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு கடந்த 2 ஆம் தேதி அறிவித்திருந்தது. கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் எம்.ஆர்.என்.ஏ (mRNA) வகை கொரோனா தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்த 2 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு நேற்று முன்தினம் (03.10.2023) அறிவித்திருந்தது. அதன்படி அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பியரி அகோஸ்தினி, ஃபெரங்க் க்ரவுஸ் மற்றும் ஆனி ஹூலியர் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலக்ட்ரான்களின் உலகத்தை ஆராய்வதற்கான புதிய கருவிகளைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வேதியியல் துறைக்கான நோபல் பரிசு நேற்று (04.10.2023) அறிவிக்கப்பட்டது. அதன்படி வேதியியலுக்கான நோபல் பரிசு மௌங்கி ஜி. பாவெண்டி, லூயிஸ் இ.புரூஸ் மற்றும் அலெக்ஸி ஐ.எகிமோவ் ஆகிய மூவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. குவாண்டம் புள்ளிகளைக் கண்டுபிடித்துத் தொகுத்ததற்காக நோபல் பரிசு வழங்குவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் 2023ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, நார்வே நாட்டைச் சேர்ந்த ஜோன் ஃபொஸ்ஸே என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடகம் மற்றும் உரைநடையில் சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக இந்த பரிசு வழங்குவதாக ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு தேர்வு குழு அறிவித்துள்ளது.
Next Story
புக்கர் பரிசு போட்டியில் தமிழ் நாவல்; எழுத்தாளர் பெருமாள் முருகன் மகிழ்ச்சி
இலக்கிய விருதுகளில் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது புக்கர் பரிசு ஆகும். இந்த விருதானது ஆங்கிலத்தில் வெளியாகும் நூல்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கான போட்டியில் தமிழக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய "பூக்குழி" என்ற நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'பைர்' என்ற நாவல் இடம்பெற்று உள்ளது. இந்த நாவல் 2016 ஆம் ஆண்டு வெளியானது. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த காதல் ஜோடி ஒன்று வீட்டை விட்டு செல்வதைப் பற்றியும், ஆணவக் கொலைகள் பற்றியும் இந்த நாவல் கதைக்களமாக கொண்டு விவரிக்கிறது. இதனை ஆங்கிலத்தில் அனிருதன் வாசுதேவன் மொழிபெயர்த்துள்ளார்.
இதுகுறித்து எழுத்தாளர் பெருமாள் முருகன் முகநூலில், "தமிழ் நாவல் ஒன்று (பூக்குழி) புக்கர் பரிசுக்குரிய நெடும்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மகிழ்ச்சியை அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறேன்" என்று தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்".