Skip to main content

"பிரதமர் பதவியேற்பு சட்டவிரோதமானது"... மகாதீர் குற்றச்சாட்டு...

Published on 04/03/2020 | Edited on 04/03/2020

மலேசியாவின் புதிய பிரதமராக முஹையதீன் யாசின் பதவியேற்றது சட்டவிரோதமானது என அந்நாட்டின் முன்னாள் முதல்வர் மகாதீர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

mahathir about new malaysian pm

 

 

மலேசியாவில் மகாதீர் முகமது தலைமையிலான அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாக இருந்த சூழலில் கடந்த மாதம் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மகாவீர் அறிவித்தார். கூட்டணிக் கட்சிகளின் வலியுறுத்தலின் பேரிலும், தனது கட்சியில் நிலவிய அரசியல் காரணமாகவும் அவர் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பெரும்பான்மையை இழந்த மகாதீர், தனது ராஜினாமா கடிதத்தை மலேசியா மன்னரிடம் கொடுத்தச் சூழலில், அவரையே மீண்டும் பிரதமராக பதவியேற்க மலேசிய மன்னர் அழைப்பார் என அவரது ஆதரவாளர்கள் நம்பினர்.

அதே நேரம் அவருடையக் கட்சியை சேர்ந்த மற்றொரு முக்கியத் தலைவரான அன்வர் இம்ராகிம் பிரதமராகப் பதவியேற்கலாம் என தகவல்கள் பரவின. ஆனால் அந்நாட்டு முன்னாள் உள்துறை அமைச்சர் முஹையதீன் யாசின் பிரதமராகப் பதவியேற்க அழைக்கப்பட்டார். இந்நிலையில் மன்னரின் முடிவுக்கு மகாதீர் தலைமையிலான கூட்டணி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. தங்களுக்கு பெரும்பான்மை இருக்கும் நிலையில் முஹையதீன் யாசீனை அழைத்தது சட்டவிரோதமானது எனக் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்டி முஹையதீன் யாசினின் பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தப்படும் என மகாதீர் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மலேசிய பிரதமருடன் ரஜினி சந்திப்பு

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

rajini meets malaysia pm

 

ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக லைகா தயாரிப்பில் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இரண்டு படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

 

சினிமாவைத் தாண்டி அவ்வப்போது பல்வேறு ஆளுமைகளை சந்திக்கும் ரஜினி, சமீபத்தில் இமயமலை பயணம் மேற்கொண்ட பிறகு தொடர்ந்து பல அரசியல் தலைவர்களை சந்தித்தார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தன. 

 

அந்த வகையில் தற்போது மலேசியா சென்றுள்ள ரஜினி, அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட அந்நாட்டு பிரதமர், "ஆசிய மற்றும் சர்வதேச கலை உலக அரங்கில் பரிச்சயமான பெயர் கொண்ட இந்தியத் திரைப்பட நட்சத்திரமான ரஜினிகாந்தை சந்தித்தேன். எனது போராட்டத்திற்கு குறிப்பாக மக்களின் துயரம் மற்றும் துன்பம் தொடர்பாக அவர் அளித்த மரியாதையை நான் பாராட்டுகிறேன். ரஜினிகாந்த் தொடர்ந்து திரையுலகில் சிறந்து விளங்க பிரார்த்திக்கிறேன்" என ரஜினியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 

 

 


 

Next Story

மலேசியாவில் அஜித் ரசிகர்கள் சாதனை

Published on 12/01/2023 | Edited on 12/01/2023

 

Ajith fans record in Malaysia

 

தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' படங்கள் கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோடுகின்றன. இரு படங்களையும் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரையரங்கில் கூடுகிறார்கள். இதனால் திரையரங்குகள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன.

 

முதல் நாள் திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டம், அடாவடி, திரையரங்கு சேதம், பேனர் கிழிப்பு எனப் பல சம்பவங்கள் அரங்கேறின. இதனிடையே, மலேசியாவில் துணிவு பட வெளியீட்டை முன்னிட்டு அஜித்திற்கு 9.144 மீட்டர் உயரம் கோண்ட கட்அவுட் வைத்து அஜித் ரசிகர்கள் சாதனை படைத்துள்ளார். மலேசியாவில் எந்த நடிகருக்கும் இவ்வளவு உயரம் கொண்ட கட்அவுட் யாரும் வைத்ததில்லை என்றும், அஜித்திற்கு தான் முதல் முறை என்றும் மலேசிய அஜித் ரசிகர்கள் சொல்கின்றனர். 

 

மேலும், ஒரு நடிகருக்கு அதிக உயரம் கொண்ட கட்அவுட் வைத்துள்ளதால் மலேசிய சாதனை புத்தகத்தில் இது இடம்பெற்றுள்ளது. இதற்கான அங்கீகார சான்றிதழ் துணிவு பட மலேசிய உரிமத்தை வாங்கிய மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களில் அந்த கட்அவுட் புகைப்படத்தையும் சாதனை சான்றிதழையும் அஜித் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.