Skip to main content

ஒரு வரியில் செய்தி வெளியிட்ட பத்திரிகை... எதனால் தெரியுமா..?

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

லெபனான் நாட்டை சேர்ந்த பத்திரிகை ஒன்று ஒரு வரியில் செய்தி வெளியிட்டது பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

 

lebanese newspaper printed news in onelines to create awareness among people

 

 

லெபனான் நாட்டில் மோசமான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில், மக்களுக்கு அரசியல் குறித்த விழிப்புணர்வையும், அந்நாட்டின் தற்போதைய நிலையையும் கொண்டு சேர்க்கும் வகையில்  “தி டெய்லி ஸ்டார்” என்ற பத்திரிகை இப்படி செய்தி வெளியிட்டுள்ளது.

லெபனான் நாட்டில் நடக்கும் உள்நாட்டு அரசியல் பிரச்சனை, அரசின் செயல்படாத் தன்மை, பொதுக்கடன் அதிகரிப்பு, மோசமான பொருளாதார சூழ்நிலைகள், வேலையில்லா திண்டாட்டம், முறைகேடான ஆயுதப் பயன்பாடு மற்றும் அதிகபட்ச மாசுபாடு ஆகியவற்றை மேற்கோள்காட்டி இந்த செய்திங்களை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த செய்தித்தாளின் கடைசி பக்கத்தில் அந்நாட்டின் தேசியச் சின்னமான சிதார் மரத்தை அச்சிட்டு அதன் கீழ் “தாமதமாவதற்கு முன்பே விழித்துக் கொள்ளுங்கள்” என்று அச்சிடப்பட்டுள்ளது.

இது குறித்து "தி டெய்லி ஸ்டார்" நாளிதழின் தலைமை செய்தி ஆசிரியர் நதீம் லட்கி கூறுகையில், “நாடு சந்திக்கும் பிரச்சனைகளைகளையும், அதை உடனே சரி செய்ய வேண்டிய அவசியத்தையும் நாங்கள் அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணி அடித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லெபனானில் இருந்து திடீர் தாக்குதல்; இஸ்ரேல் பதிலடி - மத்திய கிழக்கில் பதற்றம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Rocket attack from Lebanon towards Israel

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையே, இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர்ச்சூழல் நிலவும் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும், இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலை சமாளிப்பதற்கு இஸ்ரேலும் களமிறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர்  இன்று இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 40க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் ஏவப்பட்ட நிலையில் அதனை இஸ்ரேல் நடு வானிலேயே தடுத்து தாக்கி அழித்தது. இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறி வைத்து, இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் கொல்லப்பட்ட மற்றும் பதிப்பு நிலவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பினர் எந்த மாதிரியான பதிலடித் தாக்குதலை கொடுக்க போகிறார்கள் என்று மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Next Story

‘இந்தியாவில் தமிழ்நாடு தான் டாப்’ - அமெரிக்க நாளிதழ் பாராட்டு

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
American newspaper praise Tamil Nadu is the top in india

தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் ரூ. 6 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 27 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்பட்டது. 

மாநாட்டைத் தொடர்ந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு 8 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் என்ற பிரபல நாளிதழ், தமிழ்நாடு தொழில்துறையில் முன்னிலை வைத்து வருவதாக பாராட்டி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அந்த கட்டுரையில், ‘எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உற்பத்தியை, இந்தியாவில் அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக மத்திய அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு நாடு முழுவதும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கு மானியம் வழங்க ஆரம்பித்தது. இதனால் நொய்டா உள்ளிட்ட சில இடங்களில் புதிய தொழிற்சாலைகள் உருவாகின. ஆனால், தமிழ்நாட்டிலோ மின்னணு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படுவதற்கு சலுகைகள் காரணமாக அமையவில்லை.

போக்குவரத்து வசதி, ஏராளமான பட்டதாரிகள், சிறந்த கல்வி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் தமிழ்நாட்டில் உள்ளதால் அங்கு எலக்ட்ரானிக்ஸ் தொழில்கள் ஈர்த்துள்ளன. நீண்ட காலமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தியில் தைவானைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தான் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஆனால், ஐபோன் தயாரிப்பு மையமாக தமிழ்நாடு உருவாகி வருகிறது. 18,720 தொழிலாளர்கள் தங்கும் வசதி கொண்ட இரும்பு பிரம்மாண்ட குடியிருப்புகள் ஸ்ரீபெரும்புதூரில் கட்டப்பட்டு வருகின்றன. சீனாவில் ஐபோன் தயாரிக்கப்பட்டு வந்த ஷெஞ்ஜென், ஜென்ஜவ் நகரங்களை போன்று ஸ்ரீபெரும்புதூர் காணப்படுகிறது. மொத்த ஐபோன் உற்பத்தியில் 13 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்படும் நிலையில் 75% தமிழ்நாட்டில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. அடுத்த ஆண்டே இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும்

இந்தியா முழுவதும் உள்ள உழைக்கும் பெண்களின் எண்ணிக்கையில், 43% பேர் தமிழ்நாட்டு மட்டுமே உள்ளனர். இந்திய மக்கள் தொகையில் 5%ஐ கொண்ட தமிழ்நாட்டில், நாட்டின் உழைக்கும் பெண்களின் எண்ணிக்கையில் 43% பேர் உள்ளனர். கார், உதிரிபாக ஆலைகள், ஃபவுண்டரி, பம்ப்செட் தயாரிப்பி, பின்னலாடை தயாரிப்பில் ஏற்கனவே தமிழ்நாடு தான் முன்னணி வைத்து வருகிறது. இந்தியாவின் தீப்பெட்டி தயாரிப்பில் தமிழ்நாட்டின் சிவகாசி முன்னணியில் உள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் செழித்து வளர்ந்துள்ளதே தொழில்துறையில் தமிழ்நாடு வெற்றி பெற காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளது.