Skip to main content

லேப்டாப் யூஸ் பண்ணாட்டி டிஸ்மிஸ்! - அமைச்சர்களுக்கு பிரதமர் கட்டளை

Published on 31/05/2018 | Edited on 31/05/2018

அமைச்சர்கள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் மடிக்கணினி பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமரே உத்தரவிட்டு அதகளப்படுத்தி உள்ளார்.
 

KP Sharma

 

நேபாளம் நாட்டின் பிரதமராக இருப்பவர் கே.பி.சர்மா ஒலி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் அந்நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றார். அப்போது அடுத்த ஆறு மாதங்களுக்குள் பிரதமர் அலுவலகத்தை காகித பயன்பாடு இல்லாமல் ஆக்குவேன் உறுதியளித்திருந்தார். 
 

இந்நிலையில், நேபாள ஆசிரியர் கூட்டமைப்பு நடத்திய 12ஆவது பொது மாநாட்டில் கலந்துகொண்ட கே.பி.சர்மா ஒலி, அடுத்த அடுத்த ஆறு மாதங்களுக்குள் மடிக்கணினி பயன்படுத்த கற்றுக்கொள்ளாத அமைச்சர்கள், அவர்களது பதவியை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 

ஏற்கெனவே இதுதொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்திருந்ததால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் எல்லோரும் தயாராக இருக்க வேண்டும். இனி அரசு தரப்பு நடவடிக்கைகளை மடிக்கணினி மூலமாகவே செய்யவேண்டும். அமைச்சர்கள் இதற்காக பிரத்யேக உதவியாளர்களை நியமித்துக் கொள்ளலாம். அதேபோல், பணிநீக்கம் செய்யப்படும் அமைச்சர்களுக்கு ஒரு மடிக்கணினி வழங்கப்படும். அடுத்த தேர்தலுக்கு முன்பாவது அவர்கள் மடிக்கணினியை முழுமையாக கற்றுக்கொண்டு வரவேண்டும். நேபாளத்தை தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்த நாடாக மாற்றுவதற்கே இந்த நடவடிக்கை என பிரதமர் கே.பி.சர்மா ஒலி தெரிவித்துள்ளார். ஒருவேளை இது டிஜிட்டல் நேபாளத்துக்கான ஒத்திகையாக இருக்குமோ என பலர் இதனை விமர்சித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நேபாளம் நிலநடுக்கம்; உயரும் பலி எண்ணிக்கையால் மக்கள் அச்சம்

Published on 04/11/2023 | Edited on 05/11/2023

 

Nepal Earthquake; People fear due to rising death toll

 

நேபாளத்தின் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நேபாளத்தில் வடமேற்குப் பகுதியில் நேற்று இரவு இந்திய நேரப்படி 11.52 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 ஆகப் பதிவாகி இருந்தது. இதனால், வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடினர். இந்த நிலநடுக்கம் வட இந்தியாவில் சில மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது. 

 

இந்த  நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 128 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் நேபாளத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் கூடும் எனச் சொல்லப்பட்டது. 

 

இந்த நிலையில், காயமடைந்தவர்களை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில், அந்த மருத்துவமனை நிரம்பி வழிவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150யை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் வீடுகளுக்கு வெளியே தங்கியிருக்கின்றனர்.

 

 

 

Next Story

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

Nepal earthquake lost life toll rises to 128

 

நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.

 

நேபாளத்தில் வடமேற்குப் பகுதியில் நேற்று இரவு இந்திய நேரப்படி 11.52 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 ஆகப் பதிவாகி இருந்தது. இதனால், வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடினர். இந்த நிலநடுக்கம் வட இந்தியாவில் சில மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 128 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் நேபாளத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் கூடும் எனச் சொல்லப்படுகிறது.