தாய்லாந்து நாட்டில் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் தாய்லாந்து மன்னர் புமிபோல் அடுல்யாதேஜ் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அதன்பின் மகா வஜிரலங்கோன் (66) அடுத்த மன்னராக அறிவிக்கப்பட்டார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இவர் வரும் சனிக்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக மன்னராக முடிசூடி அறியணை ஏறவுள்ளார். இந்நிலையில் தனது பாதுகாவலராக பணிபுரிந்த சுதிடா என்பவரை இன்று மணமுடித்துள்ளார். ஏற்கனவே 3 முறை திருமணமாகி விவாகரத்தான இவர் தற்போது நான்காவது மனைவியாக சுதிடாவை திருமணம் செய்துள்ளார். தாய் ஏர்வேஸ் நிறுவனத்தில் விமான உதவியாளராக பணியாற்றிய சுதிடா கடந்த 2014 ஆம் ஆண்டு மகா வஜிரலங்கோனின் பாதுகாவலராக பணியமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.