Skip to main content

ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில் தண்டனையளித்த கிம்!!!

Published on 11/06/2019 | Edited on 11/06/2019

வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் ஒரு சர்வாதிகாரி. வித்தியாசமான முறைகளில் தண்டனை கொடுப்பதில் பெயர் போனவர். அங்கு அவர் வைப்பதுதான் சட்டம், அவர் சொல்வதுதான் செய்தி. இப்படியான ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்திவரும் அவரின் அண்மைக்கால செயல்பாடு மிகவும் சர்ச்சையாகியுள்ளது. 
 

kim jong un


இராணுவப் புரட்சி நடக்கவிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், இராணுவ தளபதி ஒருவருக்கு மிகக் கொடூரமான முறையில் தண்டனை விதித்துள்ளார். அந்த இராணுவ தளபதியின் பெயரையும் அவர்கள் வெளியிடவில்லை. அவர் அளித்த தண்டனை இதுதான், இராணுவ தளபதியின் கை, கால்கள் உள்ளிட்ட உடல்பகுதிகள் வெட்டப்பட்ட நிலையில், அவரை தனது வீட்டிலுள்ள பிரானா மீன் தொட்டியில் போட்டுவிட்டார். 

பிரானா மீன்கள் அசைவ உண்ணி, அதற்கேற்றார்போலவே அவற்றின் பற்கள் மிகவும் கூர்மையானவை, வலிமையானவை, ஒரு இரும்பையே கிழிக்கும் அளவிற்கு அது வலிமையானவை. பண்டைய காலத்தில் மக்கள் அவற்றின் பற்களை ஈட்டியில் சொருகி மீன் பிடிக்கவும், விலங்குகளை வேட்டையாடவும் பயன்படுத்தினர். அந்தளவிற்கு வலிமையானவை. அவை குறைந்த நேரத்திலேயே மனித உடலை துண்டு, துண்டாக, குதறிவிடும். அப்படிப்பட்ட மீன்கள் நிறைந்த தொட்டியில்தான் அந்த இராணுவ தளபதியை வீசினார் கிம். 
 

 

kim jong un


இந்த நிகழ்வு குறித்த தகவலை தெரியப்படுத்தியுள்ள இங்கிலாந்து உளவுப்படையினர், ‘ஜேம்ஸ்பாண்டு’ படத்தின் பாணியில் கிம் ஜாங் உன் இந்த மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். 1967ம் ஆண்டு வெளியான ‘யு ஒன்லி லிவ் டுவைஸ்’ என்ற ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வில்லன் தனது உதவியாளரை பிரானா மீன்களுக்கு இரையாக்கி கொடூரமாக கொலை செய்யும் காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குமுன் அமெரிக்கா - வடகொரியா பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் அதை ஏற்பாடுசெய்த அமெரிக்க தூதர் உள்ளிட்டோரை விமானநிலையத்தில் வைத்து சுட்டுக்கொன்றதாக தகவல்கள் பரவின. அதற்குமுன் வடகொரியா ராணுவ தலைவர், மத்திய வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி, கியூபா மற்றும் மலேசியாவுக்கான தூதர்கள் உள்ளிட்டோருக்கும் கிம் ஜாங் உன், மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக தனது உரையின்போது சத்தமாக கைதட்டவில்லையென்று தனது சொந்த மாமாவையே பீரங்கியை தகர்க்க பயன்படுத்தும் குண்டுகள் மூலம் சுட்டுக்கொன்றுள்ளார். இதுவரை அவர் 16 பேருக்கு மரணதண்டனை கொடுத்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தென்கொரியாவை தூண்டும் நாடுகளை அழித்துவிடுவோம்” - வடகொரியா பகிரங்க எச்சரிக்கை

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
North Korea's warning on We will destroy countries that provoke South Korea

அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கியிருக்கும் நாடு வடகொரியா. அதேபோல சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.  ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் கிம் ஜாங் உன், அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி பயமுறுத்தி வருகிறார். அதோடு மட்டுமல்லாமல், அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி அடிக்கடி பல்வேறு ஏவுகணை சோதனைகளை அவர் நிகழ்த்தி வருகிறார்.

இதற்கிடையே, வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக, சில தினங்களுக்கு முன் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா திடீரென பீரங்கி தாக்குதல் நடத்தியது. வடகொரியா வீசிய 200க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகள் யோன்பியோங் தீவுக்கு அருகே இருநாட்டிற்கும் இடையேயான பாதுகாக்கப்பட்ட மண்டலமான கடல் பகுதியில் விழுந்தன. இதனால், இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. 

இந்த நிலையில், தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல், உக்ரைன் மீதான தாக்குதலில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவிக்கரம் நீட்டியுள்ளது. மேலும், அமெரிக்கா - தென் கொரியா நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி, தென்கொரியாவில் அமெரிக்காவின் குண்டு வீசும் விமானங்கள், அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற சக்தி வாய்ந்த ராணுவத் தளவாடங்களை அமெரிக்கா நிறுத்தி வைத்திருக்கிறது. இதனால், வடகொரியா அதிபர், தென்கொரியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து, வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், “தென்கொரியா எங்கள் முக்கியமான எதிரி. தென்கொரியாவை தூண்டும் நாடுகளை அழித்துவிடுவோம்” என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

“என் நாட்டுப் பெண்களே... தயவுசெய்து...” - கண்ணீருடன் கோரிக்கை வைத்த வடகொரிய அதிபர்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

"Have more children" - North Korean leader cries in front of women

 

பல விசித்திரமான சட்டங்களைக் கொண்டு வரும் வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன், வடகொரியா பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று கூறி மேடையிலேயே கண்கலங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கியிருக்கும் நாடு வடகொரியா. அதேபோல சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம்ஜாங் உன்.  ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் கிம்ஜாங் உன், அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி பயமுறுத்தி வருகிறார். அதோடு மட்டுமல்லாமல், அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி அடிக்கடி பல்வேறு ஏவுகணை சோதனைகளை அவர் நிகழ்த்தி வருகிறார். சர்வாதிகாரத்திற்கும், அடக்குமுறைக்கும் பேர் போன வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன், நேற்று (05-12-23) பொதுமக்களிடம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது அழுதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

வடகொரியாவில் நேற்று நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் அதிபர் கிம்ஜாங் உன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “கட்சி மற்றும் மாநிலப் பணிகளைக் கையாள்வதில் எனக்கு சிரமம் ஏற்படும்போது நான் எப்போதும் தாய்மார்களைப் பற்றி நினைப்பேன். நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து வருகிறது. இது வடகொரியாவின் எதிர்காலத்துக்கே ஆபத்து. இதனைத் தடுத்து நிறுத்தும் வல்லமை நமது நாட்டுப் பெண்களுக்கு மட்டுமே உள்ளது. 

 

பெண்கள் அதிக அளவிலான குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். தாய்மையின் பலத்தை நாம் காட்ட வேண்டும். அவர்களை சிறந்த குடிமக்களாக வளர்க்க வேண்டும். அவர்களுக்கு முறையான கல்வி வழங்க வேண்டும்” என்று பேசினார். இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது, கிம்ஜாங் உன் திடீரென்று கண் கலங்கினார். இதையடுத்து, அவர் தனது கையில் இருந்த வெள்ளை நிற கைக்குட்டையை எடுத்து துடைத்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.