Skip to main content

கழிவறையை கையோடு எடுத்து வந்த கிம் ஜாங் உன்!!

Published on 13/06/2018 | Edited on 13/06/2018

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு பிறகு வடகொரியா மற்றும் அமெரிக்க இடையேயான சந்திப்பு பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இந்த சந்திப்பு பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது என்றாலும் இறுதிவரை கிம் ஜாங் உன் மற்றும் ட்ரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெறுமா இல்லையா என்ற எதிர்பார்ப்பு அனைத்து உலக நாடுகள் மத்தியிலும் நிலவிவந்தது. ஆனால் திட்டமிட்டபடி இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் சந்தித்துக்கொண்டனர்.

 

kim

 

சிங்கப்பூரில் நடந்த இந்த சரித்திர சந்திப்பு பல சுவாரஸ்யங்களை கொண்டதாக  இருந்தது. எப்போதுமே வடகொரியா, அதிபர் கிம் ஜாங் உன் மீதான பாதுகாப்பில் முக்கியதுவம் அளித்துவருகின்ற சூழலில் இந்த முக்கிய சந்திப்பில் அவருடைய பாதுகாப்பு கருதி பல ஏற்பாடுகளை வடகொரியா மேற்கொண்டது. அந்த வரிசையில் சிங்கப்பூர் வரும்பொழுதே அவருடனே ஒரு பிரத்யேக கழிவறை கொண்டுவரபட்டது. அதாவது அவருடைய கழிவிலிருந்து அவருடைய உடல் நிலை பற்றி மற்ற நாடுகள் அறிந்துகொள்ளக்கூடாது எனவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.


 

kim

 

அதேபோல் சிங்கப்பூர் வந்ததிலிருந்து டிரம்ப் உடனான சந்திப்பின் போது  நடந்த மதிய உணவு நேரத்தில் மட்டும் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்டார் கிம் ஜாங் உன் மற்ற நேரங்களில் அவருக்காகவே வடகொரியாவில் இருந்து உணவு பொருட்கள் மற்றும் சமையல் கலைஞர்கள் உடன் வரவைக்கபட்டிருத்தனர் எனவே வடகொரிய உணவைதான் உட்கொண்டார். சாப்பாடு மட்டுமல்ல அவர் எழுதக்கூடிய பேனா, பென்சில் என அனைத்தும்  அங்கிருந்தே வரவழைக்கப்பட்டது. அதேபோல் அவரது கைரேகைகூட ஒரு இடத்திலும் பதியவிடாமல் பார்ததுக்கொண்டனர்.

 

kim

 

அவருடைய பயணம் கூட இறுதிவரை மிக ரகசியமான முறையிலேயே நடந்தது. வடகொரியாவின் அதிபராக 2011-ஆம் ஆண்டு கிம் ஜாங் உன் பதவியேற்றத்திலிருந்து அவருடைய முதல் நீண்ட பயணம் என்பதால் அதிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. வடகொரிய தலைநகர்  பியங்காங்கில் மூன்று விமானங்கள் நிறுத்தப்பட்டது அதில் எந்த விமானத்தில் அவர் பயணிப்பார் என்பது இறுதிவரை ரசியமாக வைக்கப்பட்டது.
 

kim

 

அதேபோல் பியங்காங்கிலிருந்து சிங்கப்பூருக்கு பயண நேரம் ஆறு மணிநேரம் என்றாலும் பியங்காங்கிலிருந்து சீன தலைநகர் பெய்ஜிங் சென்று அங்கிருந்து சிங்கப்பூர் வந்தார் கிம் ஜாங் உன். வடகொரியா- ஷாங்காய் வழி விமான பயணம் கடல் மீதானது என்பதால் பெய்ஜிங் வழி தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்படி பல பாதுகாப்பு ஏற்பாடுகளுடனே இந்த சந்திப்பு நடந்துமுடிந்தது.    

சார்ந்த செய்திகள்

Next Story

கிம் ஜாங் உன் போட்ட திடீர் உத்தரவு; மீண்டும் பரபரப்பில் வடகொரியா

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kim Jong Un's sudden order; North Korea is in a frenzy again

அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கி இருக்கும் நாடு வடகொரியா. அதேபோல் சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். அண்மையில் ஏவுகணைகளை வீசி கொரிய தீபகற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள வடகொரியாவில் வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடகொரியாவில் நடக்கும் நிகழ்வுகள் வெளி உலகத்திற்கு கசிந்து விடக்கூடாது எனவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் வடகொரியா அண்டை நாடுகளான ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி விட்டு பயமுறுத்தி வருகிறது.

இந்நிலையில் போருக்கு எப்போதும் தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்திற்கு கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'கிம் ஜாங் உன்-2' என்ற அரசியல் மற்றும் ராணுவத்திற்கான பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து கிம் ஜாங் உன், நம்மைச் சுற்றியுள்ள நாடுகளில் அரசியல் சூழ்நிலை, நிலையாக இல்லாதது குறித்து பேசியதோடு, இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எப்போதும் இல்லாத அளவிற்கு வடகொரியா ராணுவத்தினர் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 'கிம் ஜாங் உன்-2' பல்கலைக்கழகத்தில் அவர் ஆய்வு செய்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Next Story

வெள்ளாளர் முன்னேற்ற சங்க உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Vellalar Munnetra Sangha High Level Executive Meeting

தமிழ்நாடு வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் கழகத்தின் பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து உயர்மட்ட நிர்வாகிகள் முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் ஆர்.வி. ஹரிஹரூன் தலைமையில் இன்று (12-03-24) நடைபெற்றது. இதில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் சார்பில் பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்த கருத்துகளை உயர்மட்ட நிர்வாகிகள் வழங்கினார்கள். மேலும், இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சோழிய வேளாளர் நலச் சங்கம் சார்பாக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள். இதில் தேர்தல் கூட்டணி, ஆதரவு நிலைப்பாடுகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் ஆலோசனைகள் மேற்கொண்டு இறுதி முடிவை வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் & கழகத்தின் உயர் மட்ட கமிட்டி விரைவில் அறிவிக்கும் என்று முடிவு செய்யப்பட்டது .