Advertisment

கொரோனா பயத்தில் வட கொரிய அதிபர் - பொது இடங்களுக்கு வருவது தவிர்ப்பு!

சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

Advertisment

சில நாடுகளில் அந்த வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் எவ்வித உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆனால் உலக நாடுகளில் உயிரிழப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சீனாவுக்கு சிறிதும் தொடர்பில்லாத நாடுகளில் கூட கொரோனா வைரஸ் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இந்நிலையில் தென் கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அண்டை நாடான வட கொரியாவில் அதன் பாதிப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தொடர்ந்து ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள வட கொரியாவில் இந்த நோய் தாக்கம் இல்லை என்பது ஆச்சரியமாக இருப்பதாகவும் ஒரு சாரார் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதற்கிடையே கொரோனா வைரஸ் பயத்தின் காரணமாக அந்நாட்டு அதிபர் கிம் ஜான் உன் பொது இடங்களுக்கு வருவதை தவிர்த்து வருகிறார்.

Advertisment

Kim Jong un
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe