ADVERTISEMENT
ADVERTISEMENT
அமெரிக்கவின் வடக்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்த 3 வயது சிறுவன் ஒருவன் அங்குள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் தொலைந்துள்ளான். ஜீரோ டிகிரிக்கு கீழ் உறைநிலையில் வெப்பநிலை இருந்ததால் அந்த சிறுவனை தேட முடியாமல் பெற்றோரும், மீட்பு படை வீரர்களும் தடுமாறினர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு பின் அந்த சிறுவனை கண்டுபிடித்து மீட்டது மீட்பு படை. அப்பொழுது அந்த சிறுவன் காட்டிலிருந்த தனது இரண்டு நாள் அனுபவங்களை பகிர்த்துள்ளான். அதன்படி காணாமல் போன சிறுவன் காட்டில் வழி தெரியாமல் தவித்த போது, அங்கு வந்த ஒரு கரடி நட்புடன் பழகியதாகவும், கடந்த இரண்டு நாட்களாக தனக்கு பாதுகாப்பாக இருந்து உணவு தேடவும் உதவி செய்ததாக கூறினான். இரண்டு நாள் கரடியின் துணையுடன் இருந்த அந்த சிறுவன் மீட்கப்பட்டு தற்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Show comments