Skip to main content

நாடாளுமன்றத்திற்கு கைக்குழந்தையை அழைத்து வந்ததற்காக வெளியேற்றப்பட்ட பெண் எம்பி...

Published on 08/08/2019 | Edited on 08/08/2019

கென்யாவில் பெண் எம்பி ஒருவர் தனது குழந்தையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்ததால் வெளியேற்றப்பட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 

kenya

 

 

மூன்று குழந்தைகளுக்கு தயாரான சுலைக்கா ஹசன் என்ற பெண் எம்பி நேற்று தனது ஐந்து மாத குழந்தையை பிறரிடம் ஒப்படைக்க முடியாத காரணத்தால் தூக்கிக்கொண்டு நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கிறார். ஹசன் குழந்தையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்ததால் காவலர்கள் முதலில் தடுத்து நிறுத்தியுள்ளனர். இவர்களை மீறி எப்படியே ஹசன் குழந்தையை தன்னுடனே எடுத்துக்கொண்டு நாடாளுமன்ற அவையில் அமர்ந்திருக்கிறார். அப்போது  நாடாளுமன்ற துணை சபாநாயகர் கிறிஸ்டோபர் வெளியே செல்லுமாறு உத்தரவிட்டார்.
 

குழந்தையை வெளியே யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு அவைக்கு வருமாறு உத்தரவிட்டார். ஹசன் தன்னுடைய குழந்தையை அவைக்கு அழைத்து வந்ததற்கு நாடாளுமன்றத்திலுள்ள சில ஆண் உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஹசனின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து அமளியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர் குழந்தையுடன் வெளியேறினார்.
 

நாடாளுமன்றத்தைவிட்டு வெளியேறிய பின் ஹசன், “நான் என் குழந்தையை முடிந்த அளவு நாடாளுமன்றதுக்கு அழைத்து வரக் கூடாது என்றுதான் முயற்சித்தேன். ஆனால் இன்று என்னால் அதைத் தவிர்க்க முடியவில்லை. ஒருவேளை நாடாளுமன்றத்தில் குழந்தைகளைப் பாத்துக் கொள்ளக் கூடிய காப்பகம் இருந்தால் நான் குழந்தையை அங்கு விட்டிருப்பேன். இந்த நாட்டில் வேலைக்கு செல்லும் அனைத்துப் பெண்களும் இந்த துயரத்தை எதிர்கொள்கிறார்கள். எல்லோராலும் குழந்தையைப் பார்த்துக் கொள்ளப் பணியாட்களை வைத்துக் கொள்ள முடியாது. தனியார் நிறுவனங்களில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கான வசதிகள் உள்ளன. நாட்டின் உயர்ந்தச் சட்ட அமைப்பான நாடாளுமன்றம் இதுபோன்ற விஷயங்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். பெண்கள் அரசியலுக்கு அதிகம் வர வேண்டுமெனில், நாடாளுமன்றம் அவர்களுக்கு குடும்ப உணர்வை தரக் கூடிய நட்புறவான சூழலை உருவாக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

மதபோதகரின் பேச்சைக் கேட்டு பட்டினி கிடந்து உயிரிழந்த மக்கள்; 81 பேரின் சடலம் தோண்டியெடுப்பு

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

'இயேசுவை காணலாம் வாங்க' என போதகரின் பேச்சைக் கேட்டு 80க்கும் மேற்பட்டோர் கென்யாவில் பட்டினி கிடந்து உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

கென்யாவின் மலிந்தி பகுதியில் உள்ள ஷஹாகோலா எனும் கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதி ஒன்றில் சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் நடத்திய சோதனையில் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை என மொத்தமாக 50க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் முதல் கட்டமாக கண்டெடுக்கப்பட்டது. 'இயேசுவை காண வேண்டுமென்றால் பட்டினி கிடந்து நோன்பு இருக்க வேண்டும்' என்று மத போதகர் கூறியதை நம்பிய அப்பகுதி மக்கள் பட்டினி கிடந்துள்ளனர்.

 

இறுதியில் உணவின்றி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாருக்கும் தெரியாமல் வனப்பகுதியில் புதைக்கப்பட்ட பின்னணி வெளியானது. இது தொடர்பாக மத போதகர் பால் வேகன்ஸி கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது கட்ட தேடலில் பல சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை மீட்கப்பட்ட சட்டங்கள் எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளது. உள்ளூர் குழுக்கள் நடத்தி வரும் தேடுதலில் மேலும் பல உடல்கள் கைப்பற்றப்படலாம் என கூறப்படுகிறது.

 

 

Next Story

சென்னை வழியாக ஆந்திரா சென்றவருக்கு 'ஒமிக்ரான்' பாதிப்பு!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021

 

'OmiCron' damage to Andhra Pradesh via Chennai!

 

சென்னை வழியாக ஆந்திரா சென்ற நபருக்கு 'ஒமிக்ரான்' பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

 

கென்யாவிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து, பின்னர் திருப்பதிக்குக் காரில் சென்ற 39 வயது பெண்ணுக்கு 'ஒமிக்ரான்' கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் ஆறு பேருக்கு எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் சோதனையில், அவர்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. 

 

'ஒமிக்ரான்' கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடல்நலன் சீராக இருப்பதாக ஆந்திர சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது, ஆந்திராவில் 'ஒமிக்ரான்' கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.