Skip to main content

"இந்த போராட்டம் நமக்கானது அல்ல" - தனது முதல் பிரச்சாரக் கூட்டத்தில் தாயின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த கமலா ஹாரிஸ்...

Published on 13/08/2020 | Edited on 13/08/2020

 

kamala harris speech at campaign

 

ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ், நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், தனது தாயை நினைவு கூர்ந்து பேசினார். 

 

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், இத்தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்குத் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அதன்பிறகு நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கமலா ஹாரிஸ் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "என்னுடைய தாய் ஷியாமலா கோபாலன்தான் எனக்கு முன்மாதிரி. என்னையும், என் சகோதரி மாயாவையும் நம்பிக்கையூட்டி வளர்த்தவர். அதனால்தான் அமெரிக்காவில் நாங்கள் சிறப்பான உயரத்தை எட்ட முடிந்தது. என் தாய் எப்போதும் என்னிடம் சொல்வது என்னவென்றால், பிரச்சனை வரும்போது சும்மா அமர்ந்திருக்காதே, முடிந்தவரை புகார் செய், ஏதாவது செய், களத்தில் இறங்கி போராடு என்று சொல்வார்.

 

உங்களுக்கு தெரியுமா? என்னுடைய தந்தையும், தாயும், உலகின் இரு எதிர் துருவங்களில் இருந்து அமெரிக்காவுக்கு வந்தவர்கள். என்னுடைய தாய் ஷியாமலா இந்தியாவைச் சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர். இருவரும் கல்விக்காக அமெரிக்காவுக்கு வந்தார்கள். போராட்டங்களில் கலந்துகொண்டபோது, அவர்கள் நண்பர்களானார்கள். இருவரும் சேர்ந்தே போராடினார்கள், நீதிக்காக முழுக்கமிட்டனர். நானும் அந்த போராட்டத்தின் ஒருபகுதியாக இருக்கிறேன். நான் பிறந்தபின் பல போராட்டங்களுக்கு என்னை என் தாயும், தந்தையும் அழைத்து சென்றுள்ளார்கள். இந்த போராட்டம் நமக்கானது அல்ல, ஒவ்வொருவரின் தலைமுறைக்கானது, தொடர்ந்து நடைபோட வேண்டும் என என் தாய் கூறுவார்" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டொனால்டு டிரம்ப் அதிபராவது பற்றி நினைத்தாலே பயமாக இருக்கிறது” - கமலா ஹாரிஸ்

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
 Kamala Harris says Just thinking about Donald Trump as president is scary

அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது 

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.

இதற்கிடையில், இந்த அதிபர் தேர்தலில் அதே குடியரசுக் கட்சியில் உள்ள அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இளம் தொழிலதிபரான விவேக் ராமசாமி என்பவர் போட்டியிடுவதாக அறிவித்தார். அமெரிக்கா அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒருவர் போட்டியிட இருப்பது நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. மேலும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கும் விவேக் ராமசாமிக்கும் கடும் போட்டி நிலவி வந்தது. 

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று விவேக் ராமசாமி அறிவித்தார். இது குறித்து பேசிய அவர், “ நான் எனது பிரச்சாரத்தை இடை நிறுத்துகிறேன். டொனால்ட் ஜே. டிரம்ப்பை ஆமோதிக்கிறேன், மேலும் அவர் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி என்பதை உறுதிப்படுத்த, என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில், அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், “டொனால்டு டிரம்ப் அதிபராக வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்புவார் என்று நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது. அதனால் தான், நான் நாடு முழுவதும் பயணம் செய்து பிரச்சாரம் செய்கிறேன். டொனால்டு டிரம்ப் அதிபராவது பற்றி நாம் அனைவரும் பயப்பட வேண்டும். நாம் பயப்படும் போது அதற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என்று கூறினார். 

Next Story

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு கரோனா உறுதி! 

Published on 27/04/2022 | Edited on 27/04/2022

 

Corona confirms US Vice President Kamala Harris!

 

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

 

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவுக்கு சென்ற நேற்று (26/04/2022) வெள்ளை மாளிகைக்கு திரும்பிய போது கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில், அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது வீட்டிற்கு சென்று தனிமைப்படுத்திக் கொண்டார். கரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், தொற்று நீங்கிய பிறகு அவர் அலுவலகம் திரும்புவார் என வெள்ளை மாளிகைத் தெரிவித்துள்ளது. 

 

ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் கரோனா பரவல் குறைந்து வந்தாலும், சில இடங்களில் ஒமிக்ரான் பிஏ2 வகை பரவல் சற்றே அதிகரித்துள்ளது.