ADVERTISEMENT
தேனி மாவட்டம் போடி குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
போடி காட்டுத்தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டுகிறேன்.
ADVERTISEMENT
காட்டுத் தீயில் சிக்கியவர்களை காப்பாற்ற தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், விமானப்படை, கமாண்டோக்கள் மற்றும் உள்ளூர் மாவட்ட நிர்வாகத்தை பாராட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
Show comments