Skip to main content

"இறையாண்மையை மீறும் செயல்.. போரில் ஈடுபட்டால் அது..' - ரஷ்யா குறித்து பைடன் பரபரப்பு பேச்சு!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021

 

joe biden

 

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு இடைக்கால தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதேபோல் 100 பேர் கொண்ட செனட் சபைக்குப் புதிதாக 34 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்தநிலையில், இந்த தேர்தலில் ரஷ்யா இடையூறை ஏற்படுத்த முயலுவதாக ஜோ பைடன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

தேசிய உளவுத்துறை இயக்குநரின் அலுவலகத்தில் இதுதொடர்பாக பேசிய ஜோ பைடன், "2022 தேர்தல் தொடர்பாகவும், தவறான தகவல்களைப் பரப்புவது தொடர்பாகவும் ரஷ்யா ஏற்கனவே என்ன செய்துவருகிறது என்று பாருங்கள். இது நமது இறையாண்மையை முற்றிலும் மீறுவதாகும்" என கூறியுள்ளார். தங்கள் நாட்டு தேர்தல்களில் ரஷ்யா தலையிடுவதாக அமெரிக்க நீண்டகாலமாக குற்றஞ்சாட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்ந்து ஜோ பைடன், தனது பேச்சின்போது ரஷ்ய அதிபர் புதினையும் விமர்சித்தார். இதுதொடர்பாக அவர், "புதினுக்கு ஒரு உண்மையான பிரச்சனை உள்ளது. அவர் அணு ஆயுதங்களைக் கொண்ட பொருளாதாரத்தின் மேல் அமர்ந்திருக்கிறார். அதுதான் அந்தப் பிரச்சனை. வேறு ஒன்றும் இல்லை. தான் ஒரு உண்மையான சிக்கலில் இருப்பதை அவர் அறிவார். இது எனது பார்வையில் அவரை இன்னும் ஆபத்தானவராக ஆக்குகிறது." என கூறியுள்ளார்.

 

மேலும் ஜோ பைடன், "நாம் பெரிய சக்தியுடன் போரில் ஈடுபட்டால், அது இணைய மீறலின் விளைவாகத்தான் இருக்கும்" என தெரிவித்தார். அமெரிக்கா, கடந்த மார்ச் மாதம் மைக்ரோசாஃப்ட் எக்ஸ்சேஞ்ச்சில் நடந்த ஹேக்கிங் தொடர்பாக ரஷ்யாவை குற்றஞ்சாட்டிவருகிறது. மேலும், ரஷ்யாவிலிருந்து நடத்தப்படும் இணைய தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ரஷ்யாவை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“3ஆம் உலகப்போர் உருவாகும்...” - ரஷ்ய அதிபர் எச்சரிக்கை

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 Russian president warns about World War 3

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.  இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், மூன்றாம் உலகப் போர் உருவாகும் சூழல் வரும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ரஷ்ய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களம் கண்டன. ரஷ்ய வரலாற்றில் முதல்முறையாக நடைபெற்ற 3 நாட்கள் வாக்குப்பதிவில், 3வது முறையாக அதிபர் தேர்தலில் புதின் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். ஸ்டாலினுக்கு பிறகு தொடர்ச்சியாக 3வது முறையாக வெற்றி பெற்ற புதின், 200 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளார். 

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும், புதின் பேசியதாவது, “அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளும், ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது என்பது முழு அளவிலான மூன்றாம் உலகப் போரை நோக்கி ஒரு படி தொலைவில் இருக்கும் என அர்த்தம். இது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அத்தகைய சூழலை யாரும் விரும்பவில்லை. அதே நேரத்தில், இந்த நவீன உலகில் எல்லாம் சாத்தியமே. உக்ரைனில் ஏற்கனவே, நேட்டோ இராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்களில் ஆங்கிலம் பேசும் வீரர்களும், பிரஞ்சு பேசும் வீரர்களும் உள்ளனர். அவர்கள் அங்கு அதிக எண்ணிக்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் வீரர்களை திரும்பப் பெறுவது நலம்” என்று கூறினார். 

முன்னதாக தேர்தல் பரப்புரையின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அங்குள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “இங்கே எல்லாம் அணுசக்தி மோதல் வருவதாக நான் நினைக்கவில்லை. உக்ரைன் மீதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால், அவை யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதே வேளையில், ராணுவ தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் சிந்தித்தால், நாங்கள் நிச்சயமாக தயாராக இருக்கிறோம். 

அணு ஆயுத போரைத் தூண்டும் வகையில் எந்த ஒரு செயலிலும் அமெரிக்கா ஈடுபடாது என்று நம்புகிறோம். மேலும், அமெரிக்கா தனது ராணுவப் படைகளை ரஷ்ய எல்லையில் அல்லது உக்ரைனுக்கு அனுப்பினால், ரஷ்யா இந்த நடவடிக்கையில் ஈடுபடும் என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ளும். ஒருவேளை, அமெரிக்கா ஆணு ஆயுத சோதனை நடத்தினால், அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“அணு ஆயுத போருக்கும் தயார்” - அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்ய அதிபர்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Russian president warns US Ready for nuclear conflict

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.  இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், அணு ஆயுத போரில் அமெரிக்கா ஈடுபட்டால் அதற்கு ரஷ்யா தயாராக உள்ளது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் வரும் மார்ச் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனையொட்டி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அங்குள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “எனக்கு இன்னும் ஆறு ஆண்டுகள் அதிகாரம் கிடைக்கும் என்பது உறுதியானது” என்று கூறினார். அப்போது, ‘நாடு உண்மையில் அணு ஆயுதப் போருக்கு தயாராக உள்ளதா’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த அவர், “இங்கே எல்லாம் அணுசக்தி மோதல் வருவதாக நான் நினைக்கவில்லை. உக்ரைன் மீதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால், அவை யதார்த்ததை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். அதே வேளையில், ராணுவ தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் சிந்தித்தால், நாங்கள் நிச்சயமாக தயாராக இருக்கிறோம். 

அணு ஆயுத போரைத் தூண்டும் வகையில் எந்த ஒரு செயலிலும் அமெரிக்கா ஈடுபடாது என்று நம்புகிறோம். மேலும், அமெரிக்கா தனது ராணுவப் படைகளை ரஷ்ய எல்லையில் அல்லது உக்ரைனுக்கு அனுப்பினால், ரஷ்யா இந்த நடவடிக்கையில் ஈடுபடும் என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ளும். ஒருவேளை, அமெரிக்கா ஆணு ஆயுத சோதனை நடத்தினால், அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.