ஜமால் கஷோகி மரணம் தொடர்பாக முழுவிவரம் கிடைக்கும்வரை சவுதி அரேபியாவுக்கு அயுதங்கள் ஏற்றுமதி செய்வது நிறுத்தப்படம் என்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொடூரமான கொலையின் பின்னணி குறித்து அறிவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜமாலின் மரணம் தொடர்பாக, பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் சவுதி எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று ஏற்கனவே எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.