அமேசான்நிறுவனத்தின்நிறுவனரும், அதன்தலைமைச் செயல் அதிகாரியுமான ஜெஃப் பெசோஸ், தற்போது அந்த பதவியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளார். உலகின்இரண்டாவது கோடீஸ்வரரான அவர், அமேசான்நிறுவனத்தின் நிர்வாகதலைவராகபொறுப்பேற்கவுள்ளார்.
இதனையடுத்து அமேசான்நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ஆண்டி ஜாஸ்ஸி என்பவர் பதவியேற்கவுள்ளார். இவர் அமேசான்நிறுவனத்தின் வலைசேவைபிரிவு தலைவர் ஆவார்.
தனது57வயதில் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பைத் துறந்துள்ளஜெஃப் பெசோஸ், அடுத்ததாக சுத்தமான காற்று, நீர், நிலம் ஆகியவற்றை அனைவருக்கும் சமமாக வழங்கும் செயல் திட்டமான எர்த்ஃபண்ட், வாஷிங்டன் போஸ்ட்பத்திரிக்கை ஆகியவை தொடர்பான பணிகளில் கவனம் செலுத்தவுள்ளதாகதெரிவித்துள்ளார்.